sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

சிவகங்கை ரயில்வே ஸ்டேஷனுக்கு  செல்லும் ரோடு அனைத்தும் சேதம்   அவதிக்குள்ளாகும் பயணிகள் 

/

சிவகங்கை ரயில்வே ஸ்டேஷனுக்கு  செல்லும் ரோடு அனைத்தும் சேதம்   அவதிக்குள்ளாகும் பயணிகள் 

சிவகங்கை ரயில்வே ஸ்டேஷனுக்கு  செல்லும் ரோடு அனைத்தும் சேதம்   அவதிக்குள்ளாகும் பயணிகள் 

சிவகங்கை ரயில்வே ஸ்டேஷனுக்கு  செல்லும் ரோடு அனைத்தும் சேதம்   அவதிக்குள்ளாகும் பயணிகள் 


ADDED : மே 16, 2025 03:12 AM

Google News

ADDED : மே 16, 2025 03:12 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகங்கை: சிவகங்கை ரயில்வே ஸ்டேஷன் செல்லும் அனைத்து ரோடுகளும் சேதமடைந்துள்ளதால், பயணிகள் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.

சிவகங்கை ரயில்வே ஸ்டேஷனில் இருந்து வெளியூர்களுக்கும், வெளியூர்களில் இருந்து சிவகங்கைக்கும் ஆண்டுக்கு 6.82 லட்சம் பேர் வந்து செல்கின்றனர். இதன் மூலம் ஆண்டுக்கு ரூ.4.02 கோடி வருவாய் கிடைக்கிறது.

தினமும் சிவகங்கையில் இருந்து பிற நகரங்களுக்கு ரயிலில் 2,000 பேர் வரை பயணிக்கின்றனர்.

குறிப்பாக கலெக்டர் அலுவலக ஊழியர்கள் காரைக்குடி, புதுக்கோட்டை, திருச்சி செல்ல சிவகங்கை புதுார் ரோடு வழியாகவும், நகர்புற மக்கள் ஊராட்சி ஒன்றிய அலுவலக ரோடு வழியாக ரயில்வே ஸ்டேஷன் செல்கின்றனர். இவ்விரு ரோடுகளும் வாகனங்களில் பயணிக்கவே முடியாத அளவிற்கு சேதமடைந்துள்ளது.

ரயில்வே ஸ்டேஷனை நிர்வாகம் சீரமைத்து, அதிக ரயில்களை விட்டபோதும், அதில் பயணிக்க நகரில் இருந்து வாகனங்களில் செல்லும் பயணிகளை மனஉளைச்சலுக்கு உள்ளாக்கும் விதமாக பல மாதங்களாக இவ்விரு ரோடுகளும் குண்டும் குழியுமாக காணப்படுகிறது.

சிவகங்கையில் ரயில்களை நிறுத்தி செல்ல வேண்டும் என சர்வ கட்சியினர் மறியல் உள்ளிட்ட போராட்டங்களை நடத்தினர். ஆனாலும் மக்கள் கோரிக்கை இது வரை ஏற்கப்படவில்லை.

தற்போது ரயில்வே ஸ்டேஷனுக்கு செல்லும் ரோடு சேதமடைந்து கிடப்பதும் பயணிகளை அதிருப்திக்கு உள்ளாக்கியுள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம் சிவகங்கை ரயில்வே ஸ்டேஷனுக்கு செல்லும் புதுார் ரோடு, சிவகங்கை ஊராட்சி ஒன்றிய அலுவலக ரோட்டினை புதுப்பிக்க வேண்டும்.






      Dinamalar
      Follow us