ADDED : செப் 30, 2025 04:14 AM
திருப்புத்துார்: திருப்புத்துார் திருத்தளிநாதர் மற்றும் பூமாயி அம்மன் கோயில்களில் நவராத்திரி விழாவை முன்னிட்டு அக்.2ல் அம்மன் அம்பு எய்தல் நடைபெறும்.
இக்கோயில்களில் நவராத்திரி விழா செப்., 23ல் துவங்கியது. திருத்தளிநாதர் கோயிலில் தினசரி மூலவர் அலங்காரமும், கொலு மண்டபத்தில் உற்ஸவ அம்மன் எழுந்தருளி தீபாராதனையும் நடந்து வருகிறது.
நாளை சரஸ்வதி அலங்காரத்தில் தீபாராதனை நடைபெறும். பூமாயி அம்மன் கோயிலில் திருவிளக்கு பூஜை, லட்சார்ச்சனை நடந்தது. நாளை சிவபூஜை அலங்காரம் நடைபெறும்.
அக்.2ல் திருத்தளிநாதர் கோயிலில் மாலை 5:00 மணிக்கு அம்மன் குதிரை வாகனத்தில் எழுந்தருளி தேரடித் தெருவில் அம்பு எய்தலும், தொடர்ந்து திருவீதி உலா நடைபெறும். பூமாயி அம்மன் கோயிலில் மாலை 5:00 மணிக்கு லட்சார்ச்சனை, இரவு 8:00 மணிக்கு அம்மன் குதிரை வாகனத்தில் எழுந்தருளி அம்பு எய்தல் நடைபெறும்.