sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

நெல் கொள்முதலுக்கு வசூல் கலெக்டரிடம் முறையீடு

/

நெல் கொள்முதலுக்கு வசூல் கலெக்டரிடம் முறையீடு

நெல் கொள்முதலுக்கு வசூல் கலெக்டரிடம் முறையீடு

நெல் கொள்முதலுக்கு வசூல் கலெக்டரிடம் முறையீடு


ADDED : பிப் 01, 2025 01:58 AM

Google News

ADDED : பிப் 01, 2025 01:58 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகங்கை:சிவகங்கை மாவட்டத்தில், 50 நெல் கொள்முதல் நிலையங்கள் செயல்படுகின்றன. மேலும், 30 கொள்முதல் நிலையங்களை திறக்க மாவட்ட நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. விவசாயிகள் தரும் நெல்லை காய வைத்து, துாசி தட்டி, மூட்டை அடுக்கி, லாரியில் ஏற்றும் வரை 40 கிலோ மூட்டைக்கு, 12 ரூபாய் வரை லோடுமேன்களுக்கு சம்பளமாக நுகர்பொருள் வாணிப கழகம் வழங்குகிறது. இதற்கு மேல், விவசாயிகளிடம், 1 ரூபாய் கூட வாங்கக் கூடாது என, கண்டிப்பான உத்தரவு அமலில் உள்ளது.

இந்நிலையில், கொள்முதல் நிலையங்களில் முகாமிடும் அரசியல் கட்சியினர், கட்சிக்கும், மாவட்ட நிர்வாகிகளுக்கும் வழங்க வேண்டும் எனக்கேட்டு விவசாயிகளிடம் 40 கிலோ மூட்டைக்கு, 25 முதல் 40 ரூபாய் வரை வசூலிப்பதாக கலெக்டர் ஆஷா அஜித்திடம், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் வீரபாண்டி தலைமையில் விவசாயிகள் புகார் தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us