/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
வேலைவாய்ப்பு முகாமில் 354 பேருக்கு நியமன ஆணை
/
வேலைவாய்ப்பு முகாமில் 354 பேருக்கு நியமன ஆணை
ADDED : மார் 16, 2025 12:37 AM
சிவகங்கை; சிவகங்கையில் நடந்த தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமில் 354 இளைஞர்களுக்கு பணி நியமன ஆணையை கலெக்டர் ஆஷா அஜித் வழங்கினார்.
சிவகங்கை மன்னர் துரைசிங்கம் அரசு கலைக்கல்லுாரியில் மாவட்ட நிர்வாகம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடந்தது.
முகாமில் 110 தனியார் தொழில் நிறுவனங்கள் தங்கள் நிறுவனங்களுக்கு பணியாளர்களை தேர்வு செய்தது. மாவட்டம் முழுவதுமிருந்து 1654 இளைஞர்கள் தங்கள் பெயரை பதிவு செய்து நேர்முகதேர்வில் கலந்து கொண்டனர். இதில் 27 பேர் மாற்றுத்திறனாளிகள். 15 மாற்றுத்திறனாளிகள் உட்பட மொத்தம் 354 இளைஞர்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கான பணி நியமன ஆணை வழங்கப்பட்டது.
வேலைவாய்ப்பு அலுவலர்கள் மணிகணேஷ், சுபாஷினி, மகளிர் திட்ட உதவி திட்ட அலுவலர் மரியா, கல்லுாரி முதல்வர் துரையரசன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.