ADDED : ஜன 02, 2025 11:49 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை; சிவகங்கை கவியோகி சுத்தானந்த பாரதி மாவட்ட மைய நுாலகம் சார்பாக திருவள்ளுவர் சிலை கன்னியாகுமரியில் நிறுவப்பட்டு வெள்ளி விழாவை முன்னிட்டு பள்ளி மாணவர்களுக்கிடையே நடந்த திருக்குறள் ஒப்புவித்தல் போட்டியில் அரு.நடேசன் செட்டியார் நடுநிலைப்பள்ளி 4ஆம் வகுப்பு மாணவன் அருண் 3ஆம் பரிசு பெற்றார்.
பரிசு பெற்ற மாணவனை வட்டாரக் கல்வி அலுவலர் பாலாமணி, பள்ளிச் செயலாளர் நடேசன், தலைமை ஆசிரியர் பாண்டியராஜன், ஆசிரியர்கள் பெற்றோர்கள் பாராட்டினர். சிவகங்கை சாம்பவிகா மேல்நிலைபள்ளி 9ஆம் வகுப்பு மாணவிகள் ஹரினிகாஸ்ரீ, தனுஸ்ரீ வினாடி வினா போட்டியில் மாவட்டத்தில் இரண்டாம் இடம் பிடித்தனர். மாணவிகளை பள்ளி செயலர் சேகர் உள்ளிட்ட ஆசிரியர்கள் பாராட்டினர்.