ADDED : பிப் 06, 2026 05:33 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை: அனைத்து உலக வள்ளலார் மாநாட்டை முன்னிட்டு சிவகங்கை ஒன்றிய அளவில் ஹிந்து சமய அறநிலைத்துறை சார்பாக பள்ளி மாணவர்களுக்கு பேச்சு, கட்டுரை, ஓவிய போட்டிகள் நடந்தது.
சிவகங்கை அரு.நடேசன் செட்டியார் நடுநிலைப்பள்ளி மாணவர்கள் பங்கேற்றனர்.
7ம் வகுப்பு மாணவி மதிஹாசப்ரின் கட்டுரை போட்டியில் முதலிடமும், 8ம் வகுப்பு மாணவர் ஹரிராஜ் ஓவியப் போட்டியில் இரண்டாம் இடம் பெற்றனர்.
வெற்றி பெற்ற மாணவர்களை மாவட்டத் தொடக்கல்வி அலுவலர் ராஜேந்திரன், வட்டாரக் கல்வி அலுவலர்கள் ஆரோக்கியசாமி, ஜான் சார்லஸ், ஆலிஸ் மேரி, வட்டார மேற்பார்வையாளர் ரூபா ராணி, ஆசிரியர் பயிற்றுநர் முகமது காசிம், பள்ளி செயலர் நடேசன், தலைமை ஆசிரியர் பாண்டிய ராஜன் பாராட்டினர்.

