sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 28, 2025 ,மார்கழி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

போலீஸ், வியாபாரிகள் இடையே வாக்குவாதம்

/

போலீஸ், வியாபாரிகள் இடையே வாக்குவாதம்

போலீஸ், வியாபாரிகள் இடையே வாக்குவாதம்

போலீஸ், வியாபாரிகள் இடையே வாக்குவாதம்


ADDED : செப் 29, 2024 11:52 PM

Google News

ADDED : செப் 29, 2024 11:52 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகங்கை : சிவகங்கை பஸ் ஸ்டாண்ட்டில் சாக்கடை கால்வாய் துார்வாருவதற்காக அதன் மீது வைக்கப்பட்ட கடைகளை அகற்றிய போது வியாபாரிகளுக்கும், போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

சிவகங்கை நகராட்சி நிர்வாகம் சார்பில் வடகிழக்கு பருவ மழை முன் நடவடிக்கையாக சாக்கடை கால்வாயில் தேங்கிய மணல், கழிவுகளை அகற்றி வரப்படுகிறது.

நேற்று சிவகங்கை பஸ் ஸ்டாண்ட் முன் பகுதியில் கால்வாய் துார்வாரும் பணி நடந்தது. அப்போது கால்வாயின் மேற்பரப்பில் இருந்த தள்ளுவண்டி கடைகளை இன்ஸ்பெக்டர் அன்னராஜா, எஸ்.ஐ., சண்முக பிரியா ஆகியோர் அகற்ற கூறினர். போலீஸ் உதவியுடன் நகராட்சி ஊழியர்கள் கடைகளை அகற்றினர்.

இதில் வியாபாரிகளுக்கும், போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. மேலும் இச்சம்பவத்தை கண்டித்து வியாபாரிகள் பஸ் ஸ்டாண்ட் முன் மறியலில் ஈடுபட முயன்றனர்.

இருப்பினும் நகராட்சி ஊழியர்கள் கடைகள் அப்புறப்படுத்தப்பட்ட பின் கால்வாய் கழிவுகளை அகற்றினர்.






      Dinamalar
      Follow us