/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
ஆருத்ரா தரிசனம் ஜன.3ல் உற்ஸவர் வீதி உலா
/
ஆருத்ரா தரிசனம் ஜன.3ல் உற்ஸவர் வீதி உலா
ADDED : டிச 26, 2025 05:29 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்புத்தூர்: திருப்புத்தூர் திருத்தளிநாதர் கோயிலில் ஜன.3ல் ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு நடராஜர் திருவீதி உலா நடைபெறும்.
இக்கோயிலில் இசை துாண்களுடன் கூடிய நடராஜர் சன்னதி ஆயிரம் ஆண்டுகள் பழமையானது. நடராஜர் கவுரி தாண்டவம் ஆடியதால் தென் சிதம்பரம் என அழைக்கின்றனர்.
இக்கோயிலில் ஜன., 2 மாலை நடராஜர், சிவகாசி அம்பாள் திருநாள் மண்டபத்தில் எழுந்தருள்கின்றனர். ஜன., 3 அன்று அதிகாலை 4:00மணிக்கு திருப்பள்ளி எழுச்சி பூஜை நடக்கும்.
மூலவர் நடராஜருக்கு அலங்காரம் நடைபெறும். மாணிக்கவாசகர் உட்பிரகாரத்தில் வலம் வருவார். இங்கு 21 பதிகம் பாடப்படும். மூலவருக்கு தீபாராதனையும், உற்ஸவம் திருவீதி உலாவும் நடைபெறும்.

