ADDED : ஜூலை 19, 2025 12:13 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேவகோட்டை: தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் பைரவருக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன. நித்திய கல்யாணி கைலாசநாதர் கோயிலில் பைரவருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரத்தில் வடைமாலை சாற்றப்பட்டு சிறப்பு பூஜை நடந்தது. பட்டுக்குருக்கள் நகர் ஸ்வர்ண பைரவருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடந்தது.
ஆடி வெள்ளி என்பதாலும் தேய்பிறை அஷ்டமியை தொடர்ந்தும் பக்தர்கள் அதிகளவு கோயில்களுக்கு சென்று சுவாமியை வழிபட்டனர்.