/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
காட்டில் இறந்து கிடந்த ஆட்டோ டிரைவர்
/
காட்டில் இறந்து கிடந்த ஆட்டோ டிரைவர்
ADDED : நவ 19, 2024 05:24 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருக்கோஷ்டியூர்: திருப்புத்துார் அருகே கண்டரமாணிக்கம் ரோட்டில் சாவியுடன் நீண்ட நேரமாக ஒரு ஆட்டோ நிற்பதை பார்த்தவர் அப்பகுதியில் டிரைவரை தேடினார். கருவைக்காட்டு பகுதியில் ஒருவர் இறந்து கிடந்ததைப் பார்த்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.
திருக்கோஷ்டியூர் போலீசார் உடலைக் கைப்பற்றி சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பினர். போலீசார் விசாரிக்கையில், இறந்தவர் தம்பிபட்டி மேட்டுதெருவை சேர்ந்த முத்து மகன் முருகானந்தம் 35. என்பது தெரியவந்துள்ளது.

