ADDED : செப் 25, 2024 05:52 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை : சிவகங்கை அரண்மனைவாசலில் சி.ஐ.டி.யு., ஆட்டோ தொழிலாளர்கள் சங்கம் ஆர்ப்பாட்டம் நடத்தினர். மாவட்டத் தலைவர் கருப்பு தலைமை வகித்தார்.
மாவட்ட துணைத் தலைவர் சசிவர்ணம் முன்னிலை வகித்தார். சி.ஐ.டி.யு., மாவட்டத் தலைவர் வீரையா, மாவட்டப் பொதுச்செயலாளர் விஜயகுமார், மாவட்ட துணைச் செயலாளர்கள் உமாநாத், செல்வம், வேங்கையா பேசினர்.
ஆன்லைன் அபராத முறையை ரத்து செய்யக் கோரியும்,பெட்ரோல், டீசலை ஜி.எஸ்.டி.க்குள் கொண்டுவர கோரி கோரிக்கை வைத்தனர். மாவட்டக்குழு உறுப்பினர் பாலா நன்றி கூறினார்.