ADDED : மார் 08, 2024 01:02 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்புவனம்: திருப்புவனம் அரசு ஆண்கள் பள்ளி மாணவர்கள் போதைக்கு எதிராக விழிப்புணர்வு ஊர்வலம் நடத்தினர். மாவட்ட மதுவிலக்கு மற்றும் அமலாக்க பிரிவு சார்பாக மக்களுக்கு கள்ளச்சாராயம் மற்றும் போதை பொருளுக்கு எதிரான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் அரசு பள்ளி மாணவர்கள் மூலம் ஊர்வலம் நடந்தது.
தலைமையாசிரியர் முருகன் விழிப்புணர்வு ஊர்வலத்தை தொடங்கி வைத்தார்.
போதைக்கு எதிரான கோஷங்களுடன் மாணவர்கள் வந்தனர். மதுவிலக்கு இன்ஸ்பெக்டர் சங்கீதா, எஸ்.ஐ., ஸ்ரீதர் மற்றும் போலீசார் பங்கேற்றனர்

