ADDED : ஜன 14, 2025 05:16 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிங்கம்புணரி: சிங்கம்புணரியில் விவேகானந்தரின் 162 வது ஜெயந்தி விழா மற்றும் தேசிய இளைஞர் தினத்தை முன்னிட்டு இந்து இளைஞர் முன்னணி சார்பில் போதை விழிப்புணர்வு பொதுக்கூட்டம் நடந்தது.
இந்து முன்னணி மாவட்ட செயலாளர் தங்கபாண்டி தலைமை வகித்தார். மாவட்ட பொதுச் செயலாளர் அக்னிபாலா முன்னிலை வகித்தார். ஆர்.எஸ்.எஸ் மாவட்டத் தலைவர் குகன், மண்டல செயலாளர் பாலசுப்பிரமணியன், பசு பாதுகாப்பு பேரவை மாவட்ட தலைவர் தினேஷ், பா.ஜ., மாவட்ட பொருளாளர் கண்ணையா, கார்த்திகேயன், செந்தில், இளையராஜா, சுவாமிநாதன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்து முன்னணி ஒன்றிய செயலாளர் விஜய் நன்றி கூறினார்.