ADDED : நவ 21, 2025 04:32 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்புத்துார்: திருப்புத்துாரில் வட கிழக்கு பருவமழை குறித்த பாதுகாப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம் நடந்தது.
செளமியநாராயண புரம் ஸ்ரீமுத்தையா மெமோரியல் கல்லுாரி முதல்வர் வெங்கடேசன் வரவேற்றார்.
தீயணைப்பு மற்றும் மீட்பு பணித்துறை சிறப்பு நிலைய அலுவலர் ஆனந்த சுப்பிரமணியன், தீயணைப்பாளர் பிரபாகரன், பிரபு ஆகியோர் பருவமழை துவங்கும் காலத்தில் இடி,மின்னல் போன்றவற்றை எதிர்கொண்டு, அவற்றிலிருந்து நம்மை எப்படி பாது காத்துக் கொள்வது குறித்து செயல்முறை விளக்கமளித்தனர்.
மாணவர்கள், பேரா சிரியர்கள் பங்கேற்றனர். பேராசிரியர்கள் சிவராமமூர்த்தி நன்றி கூறினார்.

