ADDED : பிப் 09, 2025 05:06 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிங்கம்புணரி: சிங்கம்புணரி அருகே போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டு ஜாமினில் வந்தவர் தற்கொலை செய்துகொண்டார்.
எஸ்.புதுார் ஒன்றியம் குறும்பலுார் கிராமத்தைச் சேர்ந்தவர் கருப்பையா மகன் பிரேம்குமார் 21. கோயம்புத்தூரில் டூவீலர் மெக்கானிக்காக இருந்தார்.
இரண்டு மாதங்களுக்கு முன்பு அங்கு பிளஸ் 1 படிக்கும் 16 வயது மாணவியை ஏமாற்றி கடத்திச் சென்றதாக, போலீசார் இவரை போக்சோ வழக்கில் கைது செய்தனர்.
சிறையில் இருந்து ஜாமினில் வந்த நிலையில் நேற்று குறும்பலுாரில் உள்ள தனது வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்தார். உலகம்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.

