ADDED : டிச 31, 2025 05:35 AM

சிவகங்கை: வங்கிகளுக்கு வாரத்தில் 5 நாட்கள் மட்டுமே வேலை வழங்க வேண்டும் என வலியுறுத்தி சிவகங்கையில் வங்கி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
சிவகங்கை இந்தியன் வங்கி முன் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு அகில இந்திய வங்கி ஊழியர் சங்க பொது செயலாளர் பிரேம் ஆனந்த் தலைமை வகித்தார்.
இந்தியன் வங்கி அதிகாரிகள் சங்க மண்டல செயலாளர் ஸ்டாலின், தேசிய கவுன்சில் வங்கி ஊழியர் சங்க செல்வகருப்பச்சாமி, எஸ்.டி.பி.வங்கி ஊழியர் சங்க செயலாளர் சக்திவேல், இந்தியன் வங்கி ஊழியர் சங்கம் ஞானசுந்தர் முன்னிலை வகித்தனர்.
பாங்க் ஆப் இந்தியா ஊழியர் சங்க செயற்குழு உறுப்பினர் அலெக்ஸ் வினோத், அகில இந்திய வங்கி ஊழியர் சங்க இணை செயலாளர் பாலசங்கர் பேசினர்.
சி.பி., வங்கி ஊழியர் சங்க நிர்வாகி விஜயசூர்யபிரகாஷ் நன்றி கூறினார். ஆர்ப்பாட்டத்தில் தேசிய வங்கிகளுக்கு வாரத்தில் 5 நாட்கள் மட்டுமே வேலை வழங்கும் திட்டத்தை மத்திய நிதி அமைச்சரகம் அமல்படுத்த வேண்டும் என வலியுறுத்தி கோஷமிட்டனர்.

