ADDED : டிச 05, 2024 05:52 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மானாமதுரை: சிதம்பரம் அருகே உள்ள பரங்கிப்பேட்டையைச் சேர்ந்த ஷாஜகான் மகன் பைசல் 21, இவர் திருப்பாச்சேத்தியில் உள்ள நண்பரின் வீட்டில் நடைபெற்ற விசேஷத்திற்கு வந்தவர் நண்பர்களோடு அன்னியேந்தல் அருகே வைகை ஆறு தடுப்பணையில் குளிக்கச் சென்ற போது தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டார்.
மானாமதுரை தீயணைப்பு நிலைய அலுவலர் ரமேஷ் தலைமையிலான வீரர்கள் அன்னியேந்தல் கால்வாயில் பைசல் உடலை மீட்டனர்.