sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 14, 2025 ,கார்த்திகை 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

தாயமங்கலம் கோயில் கடை ஏலம் ரத்து தொகையை குறைக்க ஏலதாரர்கள் கோரிக்கை

/

தாயமங்கலம் கோயில் கடை ஏலம் ரத்து தொகையை குறைக்க ஏலதாரர்கள் கோரிக்கை

தாயமங்கலம் கோயில் கடை ஏலம் ரத்து தொகையை குறைக்க ஏலதாரர்கள் கோரிக்கை

தாயமங்கலம் கோயில் கடை ஏலம் ரத்து தொகையை குறைக்க ஏலதாரர்கள் கோரிக்கை


ADDED : மார் 02, 2024 05:26 AM

Google News

ADDED : மார் 02, 2024 05:26 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

இளையான்குடி : தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோவில் பங்குனி பொங்கல் திருவிழா கடைகளுக்கான ஏலத்தில்நிர்ணய தொகையை ஹிந்து சமய அறநிலையத்துறை குறைக்காததால் ஏலதாரர்கள் ஏலம் கேட்காததை தொடர்ந்து ஏலம் 6வது முறையாக ரத்து செய்யப்பட்டது

தாயமங்கலம் முத்து மாரியம்மன் கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி பொங்கல் விழா தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறும். விழா நாட்களின் போது ஏராளமான பக்தர்கள் வந்து தங்களது வேண்டுதல்களை நிறைவேற்றி அம்மனை தரிசனம் செய்து செல்வர்.

இவர்களின் வசதிக்காக கோயில் வளாகத்தில் திருவிழா கடைகள் அமைப்பது வழக்கம்.இதற்கான ஏலம் கடந்த மாதம் தாயமங்கலம் கோவில் அலுவலக வளாகத்தில் நடைபெற்றது. கடந்தாண்டு திருவிழா கடைகளுக்கான ஏலம் ரூ.1கோடியே 92 லட்சத்திற்கு போனது.

இந்தாண்டு திருவிழா கடைகளுக்காக 5 முறை நடந்த ஏலத்தில் ஏலத்தொகை அதிகமாக நிர்ணயம் செய்யப்பட்டதாக கூறி ஏலதாரர்கள் ஏலம் எடுக்காததால் 5 ஏலமும் ரத்து செய்யப்பட்டது.

இந்நிலையில் நேற்று 6வது முறையாக ஹிந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் பழனிக்குமார், பரம்பரை அறங்காவலர் வெங்கடேசன்,ஆய்வர் அய்யனார், திருக்கோவில் பணியாளர்கள் தலைமையில் நடைபெற்றது. நிர்ணய தொகையாக ஒரு கோடியே 50 லட்சம் நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது. இந்த ஏலத்தில் 7 ஏலதாரர்கள் கலந்து கொண்டனர்.

ஹிந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் ஏல நிர்ணய தொகையை ரூ.1 கோடிக்கும் குறைவாக குறைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து ஏலம் கேட்காமல் இருந்தனர்.இதனைத்தொடர்ந்து

பின்னர் மீண்டும் மற்றொரு தேதியில் ஏலம் நடைபெறும் என ஹிந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் தெரிவித்த நிலையில் கோயில் வளாகத்தில் கடைகள் வைத்திருக்கும்50க்கும் மேற்பட்ட வியாபாரிகளும் ஏலத்தொகையை குறைக்க வேண்டுமென்று கோவில் முன்பாக அமர்ந்து கோரிக்கை விடுத்தனர்.






      Dinamalar
      Follow us