/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
பா.ஜ., வர்த்தகபிரிவு செயலாளர் கொலை
/
பா.ஜ., வர்த்தகபிரிவு செயலாளர் கொலை
ADDED : ஆக 31, 2025 07:04 AM

சிவகங்கை: சிவகங்கையில் பா.ஜ., வர்த்தக பிரிவு மாவட்ட செயலாளர் சதீஷ்குமார் 51, கொலையில் நேற்று முன்தினம் 5 பேரை போலீசார் கைது செய்த நிலையில், நேற்று மேலும் இருவரை கைது செய்தனர்.
சிவகங்கை வாரச்சந்தை நகராட்சி கடையில் டூவீலர் மெக்கானிக் ஷாப் நடத்தி வந்தார். பா.ஜ.,வில் வர்த்தக பிரிவு பொறுப்பில் இருந்தார். இவரிடம் மணிபாரதி என்பவர் பணிபுரிந்தார். மெக்கானிக் ஷாப் அருகே உள்ள ரூமில் இருவரும் தங்கியுள்ளனர். இவரது அறைக்கு அருகே டிரம்செட் வாசிக்கும் பணியில் உள்ள திருப்புத்துார் அருகே வடவன்பட்டி சேகர் மகன் செந்தமிழ்செல்வன் 19, திருப்புத்துார் குறிஞ்சி நகர் குணசேகரன் மகன் ஆனந்த்19, மதுரை அருகே பட்டூர் மாயழகன் மகன் அன்பரசன் 25, கருப்பையா மகன் பூபதி என்ற வாண்டு 19, இவரது சகோதரர் கண்ணன் 20, உட்பட சிலர் தங்கியிருந்தனர்.
ஆக., 28 அன்று இரவு 11:30 மணிக்கு அனைவரும் மது அருந்தியுள்ளனர். இவர்களுக்குள் ஏற்பட்ட தகராறில், மணிபாரதியை டிரம்செட் வாசிக்கும் குழுவினர் தாக்கினர்.
இதை விலக்க வந்த சதீஷ்குமாரை, இக்கும்பல் தாக்கி தள்ளிவிட்டதில் கீழே விழுந்து காயமுற்றார். சிவகங்கை அரசு மருத்துவமனையில் சேர்த்தபோது, இறந்துவிட்டதாக தெரிவித்தனர். டிரம்ஸ் வாசிக்கும் 5 பேரை நேற்று முன்தினம் போலீசார் கைது செய்திருந்தனர்.
தலைமறைவாக இருந்த ஜெயங்கொண்ட நிலை கிராமம் சுந்தரபாண்டியன் மகன் விஷ்வா 20, ஜெகநாதன் மகன் செல்வா 25, ஆகிய இருவரையும் நேற்று போலீசார் கைது செய்தனர்.