ADDED : ஜன 21, 2025 05:49 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை: பாகனேரி அரசு பெண்கள் உயர்நிலைப்பள்ளியில் 6ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு இலவசமாக திருக்குறள் புத்தகம் வழங்கும் விழா நடந்தது.
தலைமையாசிரியர் புஷ்பம் வரவேற்றார். கணித ஆசிரியர் இளமுருகு முன்னிலை வகித்தார். சிவகங்கை சுற்றுச்சூழல் பாதுகாப்பு குழு நிறுவனர் கவிஞர் கணேசன் கலந்து கொண்டார்.
கல்லல் முத்தையா மாணவர்களுக்கு திருக்குறள் புத்தகம் வழங்கினார். ஆசிரியர் செந்தில்செல்வி நன்றி கூறினார்.

