/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
நாட்டரசன்கோட்டையில் பிரம்மோற்ஸவம் கொடியேற்றத்துடன் துவக்கம் அக். 3 ல் தேரோட்டம் நடைபெறும்
/
நாட்டரசன்கோட்டையில் பிரம்மோற்ஸவம் கொடியேற்றத்துடன் துவக்கம் அக். 3 ல் தேரோட்டம் நடைபெறும்
நாட்டரசன்கோட்டையில் பிரம்மோற்ஸவம் கொடியேற்றத்துடன் துவக்கம் அக். 3 ல் தேரோட்டம் நடைபெறும்
நாட்டரசன்கோட்டையில் பிரம்மோற்ஸவம் கொடியேற்றத்துடன் துவக்கம் அக். 3 ல் தேரோட்டம் நடைபெறும்
ADDED : செப் 25, 2025 11:49 PM

சிவகங்கை: நாட்டரசன்கோட்டை அலர்மேல் மங்கா சமேத வெங்கடாஜலபதி கோயிலில் புரட்டாசி பிரமோத்ஸவ விழா நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது.
சிவகங்கை தேவஸ்தானத்திற்கு உட்பட்ட இக்கோயிலில் புரட்டாசி பிரமோத்ஸவ விழாவை முன்னிட்டு நேற்று காலை 10:45 மணிக்கு கொடியேற்றத்துடன் துவங்கியது.
உற்ஸவ மூர்த்தி அலங்காரத்தில் பெருமாள் எழுந்தருளினார். பிரமோத்ஸவ விழாவை முன்னிட்டு தினமும் காலை காலசந்தி, ேஹாமம், பலி, திருவீதிஉலா நடைபெறும். தினமும் இரவு 7:00 மணிக்கு ஸ்ரீதேவி, பூதேவியருடன் வெங்கடாஜலபதி பெருமாள் சிம்மம், அனுமன், தங்க கருட சேவை, சேஷ, யானை வாகனங்களில் திருவீதி உலா நடைபெறும்.
செப்., 30 அன்று காலை 11:00 மணி முதல் மதியம் 12:00 மணிக்கு திருக்கல்யாணம் நடைபெறும். அக்டோபர் 3ம் தேதி காலை அலங்கரிக்கப்பட்ட தேரில் ஸ்ரீதேவி, பூதேவியருடன் பெருமாள் எழுந்தருள்வார்.
அன்று காலை 9:10 மணிக்கு தேர் வடம் பிடித்து இழுக்க நான்கு ரத வீதிகளை சுற்றி வந்து தேர் நிலையை அடையும். அக்., 4 அன்று கண்ணுடைய நாயகி அம்மன் தெப்பக்குளத்தில் தீர்த்தவாரி உற்ஸவம் நடைபெறும். அக்., 5 அன்று காலை 10:00 மணிக்கு ஊஞ்சல் உற்ஸவம் நடைபெறும்.