sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

பத்திரப்பதிவு ஆபீசில் லஞ்சம் சார் -- பதிவாளர், எழுத்தர் கைது

/

பத்திரப்பதிவு ஆபீசில் லஞ்சம் சார் -- பதிவாளர், எழுத்தர் கைது

பத்திரப்பதிவு ஆபீசில் லஞ்சம் சார் -- பதிவாளர், எழுத்தர் கைது

பத்திரப்பதிவு ஆபீசில் லஞ்சம் சார் -- பதிவாளர், எழுத்தர் கைது


ADDED : நவ 16, 2024 02:29 AM

Google News

ADDED : நவ 16, 2024 02:29 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காரைக்குடி:காரைக்குடியில் ஒருங்கிணைந்த பதிவுத்துறை அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இங்கு காரைக்குடி கண்டனுார் ரோடை சேர்ந்த வைரவேல் என்பவர் பத்திரப்பதிவுக்காக வந்துள்ளார். பத்திரப்பதிவு முடிந்து பல நாட்கள் ஆகியும் பத்திரம் வழங்கப்படவில்லை.

பத்திரப்பதிவு அலுவலகத்தில் வைரவேல் கேட்டபோது, 60,000 ரூபாய் கொடுத்தால் தான் பத்திரம் தர முடியும் என சார் - பதிவாளர் - 2 அலுவலக சார் - பதிவாளர் முத்துப்பாண்டி, 36, தெரிவித்துள்ளார். இது சம்பந்தமாக வைரவேல் லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

பத்திரப்பதிவு அலுவலகம் சென்ற வைரவேல், சார் - பதிவாளர் முத்துப்பாண்டியிடம் பணத்தை கொடுத்தார்.

அங்கு மறைந்திருந்த டி.எஸ்.பி., ஜான் பிரிட்டோ, இன்ஸ்பெக்டர்கள் ஜேசுதாஸ், கண்ணன், எஸ்.ஐ., ராஜா முஹம்மது மற்றும் போலீசார், முத்துப்பாண்டி மற்றும் அவருக்கு உதவியாக இருந்த பத்திர எழுத்தர் புவனப்பிரியாவை கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us