sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, செப்டம்பர் 07, 2025 ,ஆவணி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

திருப்புவனத்தில் பஸ் ஸ்டாப் ஆக்கிரமிப்பு

/

திருப்புவனத்தில் பஸ் ஸ்டாப் ஆக்கிரமிப்பு

திருப்புவனத்தில் பஸ் ஸ்டாப் ஆக்கிரமிப்பு

திருப்புவனத்தில் பஸ் ஸ்டாப் ஆக்கிரமிப்பு


ADDED : செப் 02, 2025 03:32 AM

Google News

ADDED : செப் 02, 2025 03:32 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்புவனம், : திருப்புவனம் பஸ் ஸ்டாப்களில் ஷேர் ஆட்டோக்கள், சரக்கு வாகனங்களை நிறுத்துவதால் பயணிகள் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர்.

திருப்புவனம் மற்றும் சுற்றுவட்டார கிராம மக்கள் மதுரை, மானாமதுரை, ராமேஸ்வரம், கமுதி உள்ளிட்ட வெளியூர் சென்று வர திருப்புவனத்தில் இருந்து தான் பஸ் ஏறி இறங்குகின்றனர். திருப்புவனம் நகர மக்கள் பலரும் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் வெளியூர்களில் பணிபுரிகின்றனர்.

திருப்புவனத்திற்கு 200க்கும் மேற்பட்ட ஷேர் ஆட்டோக்கள், வேன்கள் இயக்கப்படுகின்றன. திருப்புவனம் கோட்டை பஸ் நிறுத்தத்தின் இரு புறமும் வரிசையாக நிறுத்துகின்றனர். இதனால் பஸ்களில் பயணிகள் ஏறி இறங்க சிரமப்படுகின்றனர்.

மேலும் ஷேர் ஆட்டோ, வேன் ஓட்டுனர்கள் சிலர் அரசு பஸ் டிரைவர், கண்டக்டர்களையும் மிரட்டுகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன் பயணிகளை ஏற்றுவதில் ஏற்பட்ட தகராறில் அரசு டவுன் பஸ் முன் ஷேர் ஆட்டோவை நிறுத்தி டிரைவர், கண்டக்டர்களை மிரட்டினர்.

போலீசார் வந்து ஆட்டோ ஓட்டுனர்களை எச்சரித்தனர். இந்த பிரச்னையால் தொலை துார பஸ்கள் திருப்புவனம் நகருக்குள் வராமல் பைபாஸ் ரோட்டிலேயே சென்று விடுகின்றன.

இதுகுறித்து போக்குவரத்து கழக அதிகாரிகள் புகார் கூறியும் எந்த வித நடவடிக்கையும் எடுப்பதில்லை. மதுரை உள்ளிட்ட பல மாவட்டங்களைச் சேர்ந்த ஆட்டோக்கள் திருப்புவனத்தில் இயக்கப்படுகின்றன.

எனவே மாவட்ட நிர்வாகம் போக்குவரத்திற்கு இடையூறு செய்யும் ஆட்டோக்கள் மீது நடவடிக்கை எடுப்பதுடன் பஸ் ஸ்டாப்களில் ஷேர் ஆட்டோக்கள், வேன்களை நிறுத்தி பயணிகளை ஏற்றி இறக்க தடை விதிக்க வேண்டும்.






      Dinamalar
      Follow us