sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 12, 2025 ,புரட்டாசி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

பங்கு சந்தையில் முதலீடு என வணிகரிடம் ரூ.87 லட்சம் மோசடி

/

பங்கு சந்தையில் முதலீடு என வணிகரிடம் ரூ.87 லட்சம் மோசடி

பங்கு சந்தையில் முதலீடு என வணிகரிடம் ரூ.87 லட்சம் மோசடி

பங்கு சந்தையில் முதலீடு என வணிகரிடம் ரூ.87 லட்சம் மோசடி


ADDED : ஏப் 03, 2025 02:13 AM

Google News

ADDED : ஏப் 03, 2025 02:13 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தேவகோட்டை:சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்தவரிடம், பங்கு சந்தையில் முதலீடு செய்தால் லாபம் அதிகம் கிடைக்கும் எனக்கூறி, 87 லட்ச ரூபாய் மோசடி செய்யப்பட்டது.

சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை ராம் நகரை சேர்ந்தவர் சந்திரன், 88. வணிகரான இவரது வாட்ஸாப் எண்ணில் ஜன., 13ல் பேசியவர், பிரபல வெளிநாட்டு வங்கி ஒன்றில் மேலாளராக பணிபுரிவதாக கூறினார்.

மேலும் பங்குச்சந்தை ஆலோசகராகவும் உள்ளதாக கூறினார். புதிதாக வெளியாகும் பங்குகளில் முதலீடு செய்தால், அதிக லாபம் கிடைக்கும் என்று கூறி சந்திரனை நம்ப வைத்தார்.

இதையடுத்து, சந்திரன் தன் வங்கி கணக்குகளில் இருந்து, 87 லட்சம் ரூபாயை, அந்த நபர் கூறிய பங்குகளில் முதலீடு செய்தார். அந்த பணத்தை தன் கணக்குக்கு மாற்றி ஏமாற்றினார். சந்திரன் அவரை தொடர்பு கொள்ள முயற்சித்தும் முடியவில்லை.

இது தொடர்பான புகாரின்படி, சிவகங்கை சைபர் கிரைம் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us