ADDED : பிப் 08, 2024 06:42 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
எஸ்.எஸ்.கோட்டை : சிங்கம்புணரி அருகே கார் லாரி மோதியதில் கார் டிரைவர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.
திருவண்ணாமலையை சேர்ந்தவர் சத்யமூர்த்தி மகன் செந்தில் 22. எம்.அய்யாபட்டியில் வசித்து வருகிறார். இவர் எஸ்.எஸ்.கோட்டை தண்ணீர் கண்மாய் அருகே காரில் சென்றார். எதிரில் திருப்புத்தூரில் இருந்து மதுரை வந்த லாரி மீது கார் மோதியது.
இதில் செந்தில் திருப்புத்தூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இறந்தார். எஸ்.எஸ்.கோட்டை போலீசார் லாரி டிரைவர் இசக்கி ராஜாவை கைது செய்தனர்.

