ADDED : மே 01, 2025 06:20 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேவகோட்டை: தேவகோட்டை நகராட்சி கமிஷனரை நகராட்சி தலைவர் மிரட்டுவதாகவும் அவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி நகர காங். தலைவர் வக்கீல் சஞ்சய் பெயரில் நகரில் சில இடங்களில் போஸ்டர் ஒட்டப்பட்டது.
நகராட்சி தலைவர் சுந்தரலிங்கம் தன் மீது அவதுாறாகவும் , தனது பெயருக்கு களங்கம் ஏற்படும் வகையில் பொய்யான தகவலை பரப்புவதாகவும் நகர காங். தலைவர் சஞ்சய் மீது நடவடிக்கை எடுக்க போலீசில் நகராட்சி தலைவர் சுந்தரலிங்கம் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.