/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
அதிக லாபம் தருவதாக ரூ.5 லட்சம் மோசடி ஒருவர் மீது வழக்கு
/
அதிக லாபம் தருவதாக ரூ.5 லட்சம் மோசடி ஒருவர் மீது வழக்கு
அதிக லாபம் தருவதாக ரூ.5 லட்சம் மோசடி ஒருவர் மீது வழக்கு
அதிக லாபம் தருவதாக ரூ.5 லட்சம் மோசடி ஒருவர் மீது வழக்கு
ADDED : ஏப் 02, 2025 02:47 AM
சிவகங்கை:சிவகங்கை வர்த்தக நிறுவனத்தில் முதலீடு செய்தால் அதிக லாபம் தருவதாக கூறி ரூ.5 லட்சம் ஏமாற்றிய நபர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே எமனேஸ்வரம் வைகை நகரை சேர்ந்தவர் ரெங்கன் மகன் துரைராஜ். இவர் அங்கு மசாலா துாள் வியாபாரம் செய்து வருகிறார். இவரது நண்பர் விஜயகுமார் மூலம் சிவகங்கை திரவுபதி அம்மன் கோயில் தெரு தனசேகரன் பழக்கம் கிடைத்துள்ளது. இவர் வாணியன்குடியில் உள்ள வர்த்தக நிறுவனம் ஒன்றில் பணத்தை முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என்று துரைராஜிடம் கூறியுள்ளார். இதை நம்பிய துரைராஜ் , தனசேகரன் வங்கி கணக்கிற்கு ரூ.5 லட்சத்தை அனுப்பியுள்ளார். பணத்தை பெற்ற பிறகு தனசேகரன் லாபத்தொகை கொடுக்காமல் ஏமாற்றினார். இதில் துரைராஜ் சிவகங்கை ஜே.எம்., நீதிமன்றம் 1ல் வழக்கு தொடர்ந்தார். நீதிமன்ற உத்தரவுப்படி தனசேகரன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

