/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
ரூ.67.40 லட்சம் மோசடி மூவர் மீது வழக்கு
/
ரூ.67.40 லட்சம் மோசடி மூவர் மீது வழக்கு
ADDED : மார் 20, 2025 01:56 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை:சிவகங்கை மாவட்டம் காரைக்குடி கணேசபுரத்தை சேர்ந்த அப்துல்ரசாக் மகன் சாகுல் ஹமீது 43.
இவர் வெளிநாடு பணிக்காக தேவகோட்டையை சேர்ந்த ரவியிடம் பணம் கொடுத்து ஏமாந்ததாகவும், கொடுத்த பணத்தை திரும்ப கேட்டால் மிரட்டுவதாகவும் சிவகங்கை மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார்.போலீசார் விசாரணையில் ரவி 51 நபர்களிடமிருந்து மொத்தம் ரூ.67 லட்சத்து 40 ஆயிரம் பெற்றது தெரியவந்தது.
ரவி அவரது மனைவி சாந்தி, மகன் பிரசன்னா மீது மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.