sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 29, 2025 ,ஐப்பசி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

நுாற்றாண்டு கண்ட அரசுப் பள்ளியில் விழா

/

நுாற்றாண்டு கண்ட அரசுப் பள்ளியில் விழா

நுாற்றாண்டு கண்ட அரசுப் பள்ளியில் விழா

நுாற்றாண்டு கண்ட அரசுப் பள்ளியில் விழா


ADDED : ஏப் 01, 2025 06:19 AM

Google News

ADDED : ஏப் 01, 2025 06:19 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்புத்துார்: திருப்புத்துார் ஒன்றியம்திருக்களாப்பட்டியில் நுாற்றாண்டு கண்ட தி.ஊ. துவக்கப்பள்ளிக்கு கிராமத்தினர் விழா எடுத்து கொண்டாடினர்.

திருக்களாப்பட்டியில் சுதந்திரம் அடையும் முன்பாகவே 1924ல் மாவட்ட ஜில்லா போர்டால் இப்பள்ளி துவக்கப்பட்டுஉள்ளது. இப்பள்ளிக்கு பல கட்டடங்கள் மாறி விட்டன. தற்போது பள்ளி துவங்கி நுாறு ஆண்டுகளாகியதை அடுத்து கிராமத்தினர்,முன்னாள் மாணவர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், மேலாண்மைக்குழுவினர், பெற்றோர்கள் என்று அனைவரும் சேர்ந்து பள்ளிக்கு விழா எடுத்தனர்.

மாவட்ட கல்வி அலுவலர் செந்தில்குமார்தலைமை வகித்தார். தலைமை ஆசிரியர் மேகலா வரவேற்றார். ஆசிரியர் காளிராஜ் ஆண்டறிக்கையை வாசித்தார். தொடர்ந்து பள்ளியின் ஓய்வு பெற்ற தலைமையாசிரியர் ஜெயப்பிரகாசம் வழங்கிய 'தொடு திரை வகுப்பு' துவக்கப்பட்டது.

பள்ளியின் நூற்றாண்டு உறுதிமொழியை அனைவரும் ஏற்றனர். டி.இ.ஓ., செந்தில்குமார் நூற்றாண்டு மலரை வெளியிட முன்னாள் மாணவர்கள் பெற்றுக் கொண்டனர்.

முன்னாள் தலைமை ஆசிரியர் ஜெயப்பிரகாசம், வட்டார கல்வி அலுவலர் குமார், முன்னாள் மாணவர்கள் பேசினர்.






      Dinamalar
      Follow us