sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 26, 2025 ,மார்கழி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

தீபாவளிக்கு 'சுவைக்க' தயாராகிறது செட்டிநாடு பலகாரங்கள்

/

தீபாவளிக்கு 'சுவைக்க' தயாராகிறது செட்டிநாடு பலகாரங்கள்

தீபாவளிக்கு 'சுவைக்க' தயாராகிறது செட்டிநாடு பலகாரங்கள்

தீபாவளிக்கு 'சுவைக்க' தயாராகிறது செட்டிநாடு பலகாரங்கள்


ADDED : அக் 23, 2024 05:43 AM

Google News

ADDED : அக் 23, 2024 05:43 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகங்கை : தீபாவளி பண்டிகைக்கு சுவைக்க நாட்டரசன்கோட்டை உள்ளிட்ட பல இடங்களில் பலகாரங்கள் தயாராகி வருகின்றன.

மாவட்டத்திலேயே காரைக்குடி, நாட்டரசன்கோட்டை, கோட்டையூர் உள்ளிட்ட பகுதிகளில் செட்டிநாடு பலகாரம் தயாரிப்பது, சிறு தொழிலாக நடைபெற்று வருகிறது. இங்கு, வாடிக்கையாளர் தேவைக்கு ஏற்ப தேங்காய் எண்ணெய், ரீபைண்ட் ஆயில், நெய் போன்வற்றில் தேன் குழல் (முறுக்கு), அதிரசம், மனக்கோலம், உப்பு சீடை, இனிப்பு சீடை, மசாலா முறுக்கு, லட்டு, தட்டை, தேங்காய் எண்ணெய் முறுக்கு என விதவிதமான பலகாரங்களை தயாரித்து விற்பனை செய்து வருகின்றனர்.

தீபாவளி பண்டிகையாக இருப்பதால், சவுதி அரேபியா, சிங்கப்பூர், மலேசியா போன்ற நாடுகளுக்கு விமானம் மூலம் அனுப்ப, தயாரிப்பு தீவிரமாக நடந்து வருகிறது.

சிவகங்கை மாவட்டத்தில் சிறு தொழிலாக 'செட்டிநாடு' பலகாரம் தயாரிக்கும் பணி நடைபெறுகிறது. பாரம்பரிய வீடுகள், பலகாரம் தயாரிப்பு கூடங்களில் தலா 10 முதல் 30 பேர் வரை இப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

எவ்வளவு விதமான பலகாரங்கள் மார்க்கெட்டிற்கு வந்தாலும், செட்டிநாடு பலகாரங்களை அடித்து கொள்ள முடியாது.

அந்தளவிற்கு சுவையுடன் காணப்படும். இதற்காகவே தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்கள் மட்டுமின்றி, வெளிநாடுகளில் வசிப்போருக்காக விமானங்களில் செட்டிநாடு பலகாரத்தை அனுப்பி வருகின்றனர்.

நாட்டரசன்கோட்டை எம்.ரமாபிரபா கூறியதாவது: நாட்டரசன்கோட்டையில் தயாராகும் பலகாரத்திற்கு வெளிநாடுகளில் வரவேற்பு அதிகம் உண்டு.

இங்கு முறுக்கு, அதிரசம் ஒன்று தலா ரூ.8க்கும், தேங்காய் எண்ணெய் முறுக்கு ரூ.15க்கும் விற்கிறோம். மாவு உருண்டை, சீப்பு சீடை கிலோ ரூ.500க்கும், உப்பு சீடை, மனகோலம் கிலோ ரூ.450க்கும், இனிப்பு, கார சீடை, தட்டை, லட்டு போன்றவை கிலோ ரூ.400க்கும் கிடைக்கும்.

சுகாதாரமான முறையில் இங்கு பலகாரங்கள் தயாரிக்கிறோம், என்றார்.






      Dinamalar
      Follow us