sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 22, 2025 ,மார்கழி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

காரைக்குடியில் தொ.மு.ச., நிர்வாகிகள் மோதல்

/

காரைக்குடியில் தொ.மு.ச., நிர்வாகிகள் மோதல்

காரைக்குடியில் தொ.மு.ச., நிர்வாகிகள் மோதல்

காரைக்குடியில் தொ.மு.ச., நிர்வாகிகள் மோதல்


ADDED : ஜூலை 26, 2025 03:47 AM

Google News

ADDED : ஜூலை 26, 2025 03:47 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காரைக்குடி: காரைக்குடியில் உள்ள தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக மண்டல அலுவலகத்தில், அடிக்கடி போலீசார் நிறுத்தப்படுவதற்கு அண்ணா தொழிற்சங்க நிர்வாகிகள் எதிர்ப்பு தெரிவித்ததால் வாக்குவாதம் ஏற்பட்டது.

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக காரைக்குடி மண்டலத்தின் கீழ் 13 பணிமனைகள் உள்ளன. தொ.மு.ச., தலைவர் முருகன் மற்றும் மண்டல பொதுச் செயலாளர் பச்சைமால் தரப்பினரிடையே தொடர்ந்து பிரச்னை நிலவி வருகிறது.

ஜூலை 21ம் தேதி பரமக்குடியில் மண்டல பொதுச் செயலாளர் பச்சைமால் தலைமையில் பொதுக்குழு கூட்டம் நடந்தது.

அதனைத் தொடர்ந்து, காரைக்குடி அரசு போக்குவரத்து மண்டல அலுவலக வளாகத்தில் முருகன் தலைமையில் போட்டி பொதுக்குழு கூட்டம் நடந்தது. தொ.மு.ச., அலுவலகத்தை தலைவர் முருகன் தரப்பினர் சேதப்படுத்தி பூட்டியதாக, பொதுச் செயலாளர் பச்சைமால் புகார் கூறி தனது ஆதரவாளர்களை மண்டல அலுவலகத்திற்கு வருமாறு நேற்று அழைப்பு விடுத்திருந்தார்.

நேற்று ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர்.

போலீசார், அலுவலகத்திற்குள் நுழைபவர்களை விசாரணை செய்த பிறகே உள்ளே அனுப்பினர்.

இதனால் கோபமடைந்த அடைந்த அண்ணா தொழிற்சங்க நிர்வாகி முனீஸ்வரன் தனது இருசக்கர வாகனத்தை நுழைவு வாயிலில் குறுக்கே நிறுத்தி அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். தொழிற்சங்க அலுவலகம் அனைத்தும் மண்டல அலுவலகம் வெளியே உள்ளது. தொ.மு.ச., அலுவலகம் மட்டும் எதற்காக உள்ளே உள்ளது.

அலுவலகம் உள்ளே இருப்பதால் தான் அடிக்கடி சண்டை வருகிறது. போலீஸ் வருகிறது. இதனால் பணியாளர்கள் வேலைக்கு செல்வதில் சிக்கல் நிலவுகிறது என்று அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். நீண்ட நேரம் பேச்சு வார்த்தைக்கு பிறகு அதிகாரிகள் அவரை சமாதானம் செய்து அனுப்பினர்.






      Dinamalar
      Follow us