/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
முதல்வர் கோப்பை விளையாட்டு முன்பதிவு ஆக.20 வரை நீட்டிப்பு
/
முதல்வர் கோப்பை விளையாட்டு முன்பதிவு ஆக.20 வரை நீட்டிப்பு
முதல்வர் கோப்பை விளையாட்டு முன்பதிவு ஆக.20 வரை நீட்டிப்பு
முதல்வர் கோப்பை விளையாட்டு முன்பதிவு ஆக.20 வரை நீட்டிப்பு
ADDED : ஆக 16, 2025 02:39 AM
சிவகங்கை: முதல்வர் கோப்பைக்கான மாவட்ட, மண்டல, மாநில அளவிலான விளையாட்டு போட்டியில் பங்கேற்க ஆக.,20 வரை முன்பதிவு செய்யலாம் என மாவட்ட விளையாட்டு அலுவலர் ரமேஷ்கண்ணன் தெரிவித்தார்.
அவர் கூறியதாவது:
முதல்வர் கோப்பைக்கான விளையாட்டு போட்டி யில் பங்கேற்க வீரர்கள் முன்பதிவு ஜூலை 14 முதல் நடைபெற்று வருகிறது.
மாவட்ட, மண்டல, மாநில அளவிலான போட்டிகளில் பங்கேற்க இது வரை மாநில அளவில் 10 லட்சம் வீரர்கள் (https://cmtrophy.sdat.tn.gov.in) முன்பதிவு செய்துள்ளனர். இதற்கான கடைசி நாள் ஆக.,16 வரை இருந்தது.
முதல்வர் கோப்பை போட்டியில் பங்கேற்க வீரர்களிடம் அதிக வரவேற்பு இருப்பதால், முன்பதிவு செய்வதற்கான இறுதி நாளாக ஆக.,20 இரவு 8:00 மணி வரை நீட்டிக்கப் பட்டுள்ளது. இந்த வாய்ப்பை பயன்படுத்தி முதல்வர் கோப்பை போட்டி களில் விளையாட வீரர்கள் ஆர்வமுடன் முன்பதிவு செய்ய வேண்டும்.
மேலும் விபரங்களுக்கு மாவட்ட விளையாட்டு அலுவலகம், ஆடுகளம் தகவல் தொடர்பு மையத்தை தொடர்பு கொள்ளலாம், என்றார்.