sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், செப்டம்பர் 25, 2025 ,புரட்டாசி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

அரசு பள்ளியில் அழுகிய முட்டை விசாரணைக்கு கலெக்டர் உத்தரவு

/

அரசு பள்ளியில் அழுகிய முட்டை விசாரணைக்கு கலெக்டர் உத்தரவு

அரசு பள்ளியில் அழுகிய முட்டை விசாரணைக்கு கலெக்டர் உத்தரவு

அரசு பள்ளியில் அழுகிய முட்டை விசாரணைக்கு கலெக்டர் உத்தரவு


ADDED : ஜூன் 10, 2025 06:43 AM

Google News

ADDED : ஜூன் 10, 2025 06:43 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகங்கை : சிவகங்கை அரசு பள்ளி மாணவர்களுக்கு அழுகிய முட்டை வழங்கப்பட்டது குறித்து விசாரணை நடத்த கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.

சிவகங்கை மாவட்டத்தில், 1,273 பள்ளியில், சத்துணவு மையங்கள் வாயிலாக, 90,593 மாணவர்கள் மதிய உணவு சாப்பிடுகின்றனர். 1,552 அங்கன்வாடி மையங்கள் வாயிலாக, 24,000 குழந்தைகள் சத்துணவு சாப்பிடுகின்றனர்.

இவர்களுக்கு, நாமக்கல் முட்டை நிறுவனத்திடம் இருந்து ஒப்பந்ததாரர்கள் கொள்முதல் செய்து, அந்தந்த அங்கன்வாடி, பள்ளி சத்துணவு மையங்களுக்கு முட்டை வினியோகம் செய்கின்றனர்.

சிவகங்கை மாவட்டம், காளையார்கோவில் ஒன்றியத்திற்கு உட்பட்ட பெரும்பாலான அரசு பள்ளிகளில் மாணவர்களுக்கு நேற்று வழங்கிய முட்டைகள் அனைத்தும் அழுகி இருந்தன.

கலெக்டர் ஆஷா அஜித் கூறுகையில், “முட்டை அழுகியது குறித்து நேர்முக உதவியாளர் வாயிலாக விசாரணை செய்யப்படும். முட்டைகளை, மையங்களுக்கு வாரந்தோறும் இருமுறை வினியோகம் செய்ய வேண்டும்.

''ஆனால், ஒரு வாரத்திற்கான மொத்த முட்டைகளையும், ஒரே நாளில் சப்ளை செய்தால், பாதுகாக்க 'பிரிஜ்' வசதி கிடையாது.

''முன்கூட்டியே முட்டை வழங்கியது தெரியவந்தால், ஒப்பந்ததாரர்களுக்கு நோட்டீஸ் வழங்கப்படும். பள்ளி, சத்துணவு மையங்களுக்கு, தரமான முட்டை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்,” என்றார்.






      Dinamalar
      Follow us