sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

சிவகங்கையில் ஆட்சி மொழி  சட்ட வாரம் கடைபிடிப்பு  கலெக்டர் தகவல்

/

சிவகங்கையில் ஆட்சி மொழி  சட்ட வாரம் கடைபிடிப்பு  கலெக்டர் தகவல்

சிவகங்கையில் ஆட்சி மொழி  சட்ட வாரம் கடைபிடிப்பு  கலெக்டர் தகவல்

சிவகங்கையில் ஆட்சி மொழி  சட்ட வாரம் கடைபிடிப்பு  கலெக்டர் தகவல்


ADDED : டிச 12, 2024 05:12 AM

Google News

ADDED : டிச 12, 2024 05:12 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகங்கை: சிவகங்கையில் டிச., 18 முதல் 27 ம் தேதி வரை ஆட்சி மொழி சட்ட வாரம் கடைபிடிக்கப்படுகிறது என கலெக்டர் ஆஷா அஜித் தெரிவித்தார்.

அவர் கூறியதாவது: இந்நிகழ்வில் அரசு ஊழியர்களுக்கு கணினி தமிழ்,ஆட்சி மொழி சட்ட வரலாறு,அரசு உத்தரவு,சுற்றறிக்கை குறிப்பு, செயல்முறை ஆணை,அரசு அலுவலகங்களில் பெயர் பலகை அமைத்தல் ஆகிய தலைப்புகளில் பேராசிரியர்கள்,தமிழ் வல்லுநர்களை கொண்டு பயிற்சி அளிக்கப்பட உள்ளது. வணிக நிறுவனங்களில் பெயர் பலகைகளை உரிய விகிதப்படி தமிழ், ஆங்கிலம், பிற மொழிகளில் அமைத்திட வலியுறுத்தப்படும்.

வணிக நிறுவனத்தினர், தொழிலாளர் துறை அலுவலர்களுடன் பங்கேற்கும் பட்டிமன்றம், ஆட்சி மொழி சட்டத்தை அறிய செய்யும் விதத்தில் விளம்பர பதாகைகள் ஏந்தி விளக்க கூட்டம் நடத்தப்படும். அரசு ஊழியர், தமிழறிஞர்கள், தமிழ் அமைப்பினர் பள்ளி, கல்லுாரி மாணவர்களுடன் இணைந்து தமிழ் சார்ந்த கிராமிய கலை நிகழ்ச்சிகளுடன் ஆட்சி மொழி தொடர்பான பதாகை ஏந்தி விழிப்புணர்வு ஊர்வலம் டிச., 24 ல் நடத்தப்படும்.இந்நிகழ்வுகளில் அரசு ஊழியர், தமிழறிஞர்கள், மாணவர்கள் பங்கேற்று சிறப்பிக்க வேண்டும், என்றார்.






      Dinamalar
      Follow us