sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

திருப்புவனத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்றுவதில் வருவாய்த்துறை ஒத்துழைப்பு இல்லை என புகார்

/

திருப்புவனத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்றுவதில் வருவாய்த்துறை ஒத்துழைப்பு இல்லை என புகார்

திருப்புவனத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்றுவதில் வருவாய்த்துறை ஒத்துழைப்பு இல்லை என புகார்

திருப்புவனத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்றுவதில் வருவாய்த்துறை ஒத்துழைப்பு இல்லை என புகார்


ADDED : அக் 22, 2024 04:56 AM

Google News

ADDED : அக் 22, 2024 04:56 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்புவனம்: திருப்புவனத்தில் ஆக்கிரமிப்பு அகற்றுவதில் வருவாய்த்துறையினர் போதிய ஒத்துழைப்பு அளிக்கவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

திருப்புவனத்தில் தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி இருபுறமும் ஆக்கிரமிப்பு அதிகரித்துள்ளன. தினசரி ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் சென்று வரும் திருப்புவனத்தில் ஆக்கிரமிப்பு காரணமாக வாகன ஓட்டிகள் சிரமத்திற்குள்ளாகின்றனர்.

போதிய இடம் இல்லாத நிலையில் தினசரி வாகனங்கள் விபத்துகளில் சிக்குகின்றன. மேலும் சாலையோர கடைகளுக்கு மதுரையில் இருந்து தான் பொருட்கள் வாகனங்களில் கொண்டு வரப்படுகின்றன.

சாலையோரம் நிறுத்தப்பட்டு கடைகளுக்கு பொருட்கள் இறக்குவதால் தினசரி நெரிசல் ஏற்பட்டு உரிய நேரத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு செல்ல முடியவில்லை.

திருப்புவனத்தில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டன . அதன்பின் இன்று வரை ஆக்கிரமிப்பு அகற்றப்படாததால் அகலம் குறைந்து விட்டது. ஆக்கிரமிப்பு அகற்ற பொதுமக்கள் , வாகன ஓட்டிகள் வலியுறுத்திய நிலையில் நெடுஞ்சாலைத்துறையினர் ஆக்கிரமிப்புகளை கடந்த சில நாட்களுக்கு முன் அளவீடு செய்தனர். தீபாவளிக்கு முன்னதாக அகற்றப்படும் என உறுதியளித்திருந்த நிலையில் வருவாய்த்துறையினர் போதிய ஒத்துழைப்பு வழங்காததால் அகற்றப்படவில்லை.

தாசில்தார் விஜயகுமார் கூறுகையில்: நெடுஞ்சாலையில் ஆக்கிரமிப்பு அகற்றுவது நெடுஞ்சாலைத்துறை பணி, நாங்கள் ஆக்கிரமிப்புகளை அளந்து கொடுத்து விட்டோம். இனி அவர்கள் தான் அகற்ற வேண்டும், என்றார்.

நெடுஞ்சாலைத்துறையினர் கூறுகையில் :

ஆக்கிரமிப்பு அகற்ற வருவாய்த்துறை, காவல்துறை, உள்ளாட்சி அமைப்புகள் இணைந்து செயல்பட வேண்டும், போலீஸ் பாதுகாப்பு கேட்டு மனு கொடுத்து விட்டோம், வருவாய்த்துறையினர் ஆக்கிரமிப்பை அகற்ற வரவேண்டும், வர மறுப்பதால் தாமதம் ஆகிறது, என்றனர்.

மாவட்ட நிர்வாகம் அனைத்து துறையினரையும் ஒருங்கிணைத்து ஆக்கிரமிப்பு அகற்றி நெரிசல் இன்றி போக்குவரத்தை சீரமைக்க வேண்டும்.






      Dinamalar
      Follow us