ADDED : அக் 06, 2024 11:25 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை : சிவகங்கை பூவந்தியில் மாவட்ட குடிமை பொருள் கடத்தல் குற்றத்தடுப்பு பிரிவு போலீசார், வாகன சோதனையில் ஈடுபட்டனர். மானாமதுரை அருகே வெள்ளிக்குறிச்சியை சேர்ந்த போஸ் மகன் செல்வராஜ், 31, ஓட்டி வந்த காரை சோதனை செய்தனர்.
அதில் 30 மூட்டைகளில் 1,080 கிலோ ரேஷன் அரிசி கடத்தி வருவதை கண்டறிந்தனர். காருடன், ரேஷன் அரிசி மூட்டைகளை பறிமுதல் செய்த போலீசார் செல்வராஜை கைது செய்தனர்.