ADDED : டிச 10, 2024 05:18 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை: சிவகங்கையில் நுகர்வோர் விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.
கலெக்டர் ஆஷா அஜித் துவக்கி வைத்தார். மாவட்ட வருவாய் அலுவலர் செல்வசுரபி, மாவட்ட வழங்கல் அலுவலர் சபிதாள்பேகம், கலெக்டர் பி.ஏ., (பொது) முத்துக்கழுவன் முன்னிலை வகித்தனர். சிவகங்கை கோட்டாட்சியர் விஜயகுமார் உட்பட மாவட்ட வழங்கல் துறை அலுவலர்கள் பங்கேற்றனர்.
சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் துவங்கியஊர்வலம் நகரின் பல்வேறு வீதிகளில் சுற்றி வந்து, அரண்மனை வாசலில் நிறைவு பெற்றது. இந்த ஊர்வலத்தில் பூவந்தியில் உள்ள மதுரை சிவகாசி நாடார்கள் பயோனியர் மீனாட்சி மகளிர் கல்லுாரி மாணவிகள் பங்கேற்று விழிப்புணர்வு அளித்தனர்.