sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 15, 2025 ,கார்த்திகை 29, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

பட்டா இருந்தும் வீடு கட்ட முடியவில்லை ஒன்றிய கூட்டத்தில் கவுன்சிலர் வேதனை

/

பட்டா இருந்தும் வீடு கட்ட முடியவில்லை ஒன்றிய கூட்டத்தில் கவுன்சிலர் வேதனை

பட்டா இருந்தும் வீடு கட்ட முடியவில்லை ஒன்றிய கூட்டத்தில் கவுன்சிலர் வேதனை

பட்டா இருந்தும் வீடு கட்ட முடியவில்லை ஒன்றிய கூட்டத்தில் கவுன்சிலர் வேதனை


ADDED : மார் 14, 2024 03:40 AM

Google News

ADDED : மார் 14, 2024 03:40 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்புத்துார்: திருப்புத்துார் ஊராட்சி ஒன்றிய சாதாரணக் கூட்டத்தில் நடந்த விவாதத்தில் கவுன்சிலர் புகாரில் வீட்டு மனைப்பட்டா வழங்கப்பட்டுள்ளது. ஆனால் ஒதுக்கி தராததால் பயனாளிகள் வீடு கட்ட முடியாமல் உள்ளதாக' வேதனை தெரிவித்தார்.

கூட்டத்திற்கு ஒன்றிய குழு தலைவர் சண்முகவடிவேல் தலைமை வகித்தார்.பி.டி.ஓ. சத்யன் முன்னிலை வகித்தார். தீர்மானங்களை உதவியாளர் பாண்டியராஜன் வாசித்தார்.

நடந்த விவாதம் வருமாறு:

கலைமாமணி: ஆறு ஆண்டுகளுக்கு முன்பு வடக்கு இளையாத்தங்குடியில் 21 நபர்களுக்கு அரசு வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டது. வாங்கியவர்களிடம் பட்டா இருக்கிறது. பட்டா வழங்கினாலும் அந்த நபர்களுக்கு இடம் அளந்து கொடுக்கவில்லை. இதனால் அந்த இடங்கள் ஆக்கிரமிப்புக்குள்ளாகி விட்டன. 15 முறை பட்டாதாரர்கள் தாலுகா அலுவலகத்தில் கோரியும் மனையிடம் அளவீடு செய்து தரப்படவில்லை.

இந்நிலையில் வீடுமனை பட்டா வாங்கியவர்களில் 4 பேரின் வங்கி கணக்கிற்கு 6 மாதத்திற்கு முன்பு ரூ 30 ஆயிரம் ரூபாய் வரவானது. இப்பணத்தை அவர்கள் எடுத்து செலவழித்துள்ளனர்.

இரு மாதத்திற்கு முன், ஊராட்சி தலைவர் பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்தின் கீழ் செலுத்தப்பட்டது எனவும், அந்தப் பணத்தை அவர்களிடம் ஒப்படைக்கவும், நாங்கள் ஊராட்சிஒன்றிய அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும் என்று கூறியுள்ளனர். பணத்தை தராவிட்டால் போலீசார் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறியுள்ளார்.

பி.டி.ஓ.,: இது திருப்பித் தர வேண்டிய பணம். மனையிடம் தெரியாததால் திட்டம் நிறைவேற்றப்படவில்லை. திருப்பித்தர கால அவகாசம் வழங்கப்படும்.

தலைவர்: தேவையான அவகாசம் தரப்படும். மீண்டும் அவர்கள் விண்ணப்பித்து வீடு கட்டும் திட்டத்தில் சேரமுடியும். ஆக்கிரமிப்பு அகற்றி மனையிடம் அடையாளம்காண நடவடிக்கை எடுக்கப்படும்.






      Dinamalar
      Follow us