sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

காரைக்குடி மாநகராட்சியில் கவுன்சிலர்கள் வெளிநடப்பு

/

காரைக்குடி மாநகராட்சியில் கவுன்சிலர்கள் வெளிநடப்பு

காரைக்குடி மாநகராட்சியில் கவுன்சிலர்கள் வெளிநடப்பு

காரைக்குடி மாநகராட்சியில் கவுன்சிலர்கள் வெளிநடப்பு


ADDED : டிச 28, 2024 07:23 AM

Google News

ADDED : டிச 28, 2024 07:23 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காரைக்குடி, : காரைக்குடி மாநகராட்சியில் நடந்த கவுன்சிலர்கள் கூட்டத்தில், அ.தி.மு.க., கவுன்சிலர்கள் வெளி நடப்பு செய்தனர்.

காரைக்குடி மாநகராட்சி கூட்டம் நேற்று மேயர் முத்துத்துரை தலைமையில் நடந்தது. துணை மேயர் குணசேகரன், ஆணையாளர் சித்ரா முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில், பல்வேறு கவுன்சிலர்கள் பாதாள சாக்கடை, தெருவிளக்கு, சாலை உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் குறித்து பேசினர். நாய்கள் மற்றும் கால்நடைகளால் தினமும் விபத்து நடப்பதாகவும், கால்நடைகளை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டது. மேயர் முத்துத்துரை உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.

தொடர்ந்து, பேசிய அ.தி.மு.க., கவுன்சிலர்கள் காரைக்குடி மாநகராட்சியில் முறையாக பணிகள் நடைபெறவில்லை, தங்களது வார்டுகளில் திட்டப்பணிகள் புறக்கணிக்கப்படுவதாக கூறி அ.தி.மு.க., கவுன்சிலர்கள், குருபாலு, பிரகாஷ், தேவன், ராம்குமார், அமுதா மற்றும் சுயேச்சை மெய்யர் வெளிநடப்பு செய்தனர்.






      Dinamalar
      Follow us