sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, செப்டம்பர் 07, 2025 ,ஆவணி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

மன்னர் துரைசிங்கம் கல்லுாரியில் கவுன்சிலிங் ஜூன் 2 முதல் துவக்கம்

/

மன்னர் துரைசிங்கம் கல்லுாரியில் கவுன்சிலிங் ஜூன் 2 முதல் துவக்கம்

மன்னர் துரைசிங்கம் கல்லுாரியில் கவுன்சிலிங் ஜூன் 2 முதல் துவக்கம்

மன்னர் துரைசிங்கம் கல்லுாரியில் கவுன்சிலிங் ஜூன் 2 முதல் துவக்கம்


ADDED : மே 31, 2025 12:23 AM

Google News

ADDED : மே 31, 2025 12:23 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகங்கை: சிவகங்கை மன்னர் துரைசிங்கம் அரசு கல்லுாரியில் இளங்கலை முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கை கவுன்சிலிங் ஜூன் 2 முதல் துவங்குவதாக முதல்வர் அந்தோணி டேவிட் நாதன் தெரிவித்தார்.

அவர் கூறியதாவது: இக்கல்லுாரியில் முதலாம் ஆண்டு இளங்கலை பட்டப்படிப்பில் சேர ஜூன் 2 ம் தேதி கவுன்சிலிங் துவங்குகிறது. அன்றைய தினம் விளையாட்டு வீரர், தேசிய மாணவர் படை, மாற்றுத்திறனாளி, முன்னாள் ராணுவ வீரர் வாரிசுகள், பாதுகாப்பு துறையினர், அந்தமான் நிக்கோபார் மாணவர்கள் பங்கேற்கலாம்.

ஜூன் 4 அன்று பி.எஸ்சி., கணிதம், இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல், கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடப்பிரிவுக்கும், ஜூன் 5 ல் பி.ஏ., தமிழ், ஆங்கிலம், வரலாறு, பொருளியல், வணிகவியல் மற்றும் வணிக மேலாண்மையில் பாடப்பிரிவுக்கும் நடைபெறும். இரண்டாம் கட்ட கவுன்சிலிங் ஜூன் 9 ம் தேதி அறிவியல் பாடப்பிரிவு, ஜூன் 10 அன்று கலைப்பாட பிரிவுக்கு நடக்கும். மூன்றாம் கட்ட கவுன்சிலிங் ஜூன் 13 அன்று கலை, அறிவியல் பாடப்பிரிவுகளுக்கு நடத்தப்படும். இணையதளம் மூலம் விண்ணப்பித்த மாணவ, மாணவிகள் உரிய சான்றுகளுடன் பங்கேற்கலாம், என்றார்.






      Dinamalar
      Follow us