sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 16, 2025 ,மார்கழி 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

கண்மாயில் புளிய மரங்கள் வெட்டி கடத்தல்; புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை

/

கண்மாயில் புளிய மரங்கள் வெட்டி கடத்தல்; புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை

கண்மாயில் புளிய மரங்கள் வெட்டி கடத்தல்; புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை

கண்மாயில் புளிய மரங்கள் வெட்டி கடத்தல்; புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை


ADDED : பிப் 08, 2024 05:20 AM

Google News

ADDED : பிப் 08, 2024 05:20 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தேவகோட்டை, : தேவகோட்டை தாலுகாவில் கண்மாயில் உள்ள மரங்கள் வெட்டி விற்கப்படுவதாக அதிகாரிகளிடம் புகார் செய்தும் நடவடிக்கை இல்லை என மக்கள் ஆதங்கப்படுகின்றனர்.

தேவகோட்டை தாலுகாவில் திருட்டு , கொள்ளை, மணல் கொள்ளையை தொடர்ந்து கண்மாயில் அரசு புறம்போக்கு நிலங்களில் உள்ள மரங்களும் அனுமதியின்றி வெட்டி விற்கப்படுகிறது.

கடந்த ஜனவரியில் கண்ணங்கோட்டை வருவாய் கிராமம் பனந்தோப்பு கிராமத்தில் உள்ள கண்மாய் கரையில் உள்ள புளியமரங்கள் ஒரு பகுதி வெட்டப்பட்டுள்ளது. வி.ஏ. ஓ. போலீசில் புகார் செய்தார்.

இதே போல் அருகில் உள்ள தென்னீர்வயல் கண்மாய் கரையில் உள்ள பலன் தரக்கூடிய புளியமரங்களின் ஒரு பகுதியை வெட்டி கடத்தி விற்பனை செய்துள்ளனர்.

வெட்டப்பட்ட சிறு கிளைகள் மட்டுமே கிடக்கின்றன. ஆறு டன் எடையுள்ள மரங்கள் வெட்டப்பட்டு விற்கப்பட்டுள்ளதாக அப்பகுதி வி.ஏ.ஓ. தாலுகா போலீசில் புகார் செய்துஉள்ளார்.

மின்கம்பிகள் குறுக்கே சென்றதால் வெட்டியதாக கூறினர். ஆனால் மின்கம்பிகளுக்காக வெட்டினால் மேலே செல்லும் கிளைகளை வெட்ட வேண்டும், மரத்தையே வெட்டக்கூடாது, அரசு அனுமதியின்றியும் வெட்டக்கூடாது என கிராமத்தினர் தெரிவிக்கின்றனர்.

பச்சை மரங்கள் வெட்ட கலெக்டர் அனுமதி பெற வேண்டும். இந்நிலையில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை.

இந்நிலையில் ஆறாவயல் மங்களம் அருகே உள்ள கீழகடியாவயல் கிராமத்தில் கண்மாய் , அரசு புறம்போக்கு இடங்களில் உள்ள பலன் தரக்கூடிய 27 மரங்களை அறுத்து எடுத்து சென்றுள்ளனர். வெட்டப்பட்டுள்ள இடங்களில் மரத்தின் தன்மையை ஆய்வு செய்து அதற்கேற்ப இழப்பீடு வசூல் செய்ய வேண்டும் என கிராமத்தினர் கோரிக்கை வைத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us