sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 28, 2025 ,ஐப்பசி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

சிவகங்கையில் கட்டிய கடைகளை திறப்பதில்.. இழுபறி: நகராட்சிக்கு பல கோடி ரூபாய் வரை விரயம்

/

சிவகங்கையில் கட்டிய கடைகளை திறப்பதில்.. இழுபறி: நகராட்சிக்கு பல கோடி ரூபாய் வரை விரயம்

சிவகங்கையில் கட்டிய கடைகளை திறப்பதில்.. இழுபறி: நகராட்சிக்கு பல கோடி ரூபாய் வரை விரயம்

சிவகங்கையில் கட்டிய கடைகளை திறப்பதில்.. இழுபறி: நகராட்சிக்கு பல கோடி ரூபாய் வரை விரயம்


ADDED : ஆக 30, 2025 11:42 PM

Google News

ADDED : ஆக 30, 2025 11:42 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகங்கை நேரு பஜாரில் நகர்புற மேம்பாட்டு திட்டத்தில் ரூ.3.49 கோடியில் தினசரி சந்தைக்கான கடைகள் கட்டப்பட்டன. அந்த வகையில் இங்கு 90 கடைகள் வரை கட்டினர்.

கட்டிய கடைகளை ஏலம் மூலம் வாடகைக்கு விட பிப்., 6 மற்றும் 18, மார்ச் 5, ஆக., 19 ஆகிய நாட்களில் முயற்சித்தனர். கடைக்கு ரூ.1 லட்சம் வரை வைப்பு தொகையாக செலுத்த தீர்மானித்தனர். இதனால் ஏலம் எடுக்க யாரும் முன்வரவில்லை.

இதையடுத்து வைப்பு தொகையை ரூ.50 ஆயிரமாக குறைத்தனர். அந்த ஏலத்திலும் வியாபாரிகள் பங்கேற்காததால், தொடர்ந்து ஏலம் விடும் பணியை நகராட்சி நிர்வாகம் ஒத்திவைத்தே வருகிறது. இதுபோன்று பஸ் ஸ்டாண்ட்டில் ஒரு பகுதி விரிவாக்கம் ரூ.1.95 கோடியில் 2023 மார்ச்- ல் தொடங்கியது.

இந்தபணிகளும் நீண்ட இழுபறிக்கு பின் கட்டப்பட்டது. அதில் 18 கடைகள், கழிப்பறை கட்டினர். இப்பணிகளை மக்களின் பயன்பாட்டிற்கு சிவகங்கை வந்த முதல்வர் ஸ்டாலின் துவக்கிவைத்தார். அதற்கு பின்னரும் பஸ் ஸ்டாண்டிற்குள் உள்ள 18 கடைகளை ஏலம் விட்டு, வியாபாரம் நடத்துவதற்கான நட வடிக்கைகளை நகராட்சி நிர்வாகம் எடுக்கவில்லை. தொடர்ந்து வியாபாரிகள் சிலர் நீதிமன்றம் சென்றதால், கடைகளை ஏலம் விடுவதில் நகராட்சி துரிதம் காட்ட முடியாதநிலை ஏற்பட்டுள்ளது.

இதுபோன்று சிவகங்கை நகராட்சியில் தினசரி சந்தை கடை, பஸ் ஸ்டாண்ட் கடைகள் ரூ.5.44 கோடிக்கு கட்டி பல மாதங்களான நிலையில், அந்த கடைகளை வாடகைக்கு விட்டு, அதன் மூலம் நகராட்சிக்கு வருவாயை அதிகரிக்க அதிகாரிகள் எந்த முயற்சியும் எடுக்கவில்லை என புகார் எழுந்துள்ளது.






      Dinamalar
      Follow us