sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

விற்ற கொப்பரைகளுக்கு பணம் கிடைப்பதில்... தாமதம்: இ-ஏலம் முடிந்து காத்திருக்கும் விவசாயிகள்

/

விற்ற கொப்பரைகளுக்கு பணம் கிடைப்பதில்... தாமதம்: இ-ஏலம் முடிந்து காத்திருக்கும் விவசாயிகள்

விற்ற கொப்பரைகளுக்கு பணம் கிடைப்பதில்... தாமதம்: இ-ஏலம் முடிந்து காத்திருக்கும் விவசாயிகள்

விற்ற கொப்பரைகளுக்கு பணம் கிடைப்பதில்... தாமதம்: இ-ஏலம் முடிந்து காத்திருக்கும் விவசாயிகள்


ADDED : ஜூலை 18, 2025 11:58 PM

Google News

ADDED : ஜூலை 18, 2025 11:58 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிங்கம்புணரி: சிங்கம்புணரியில் அரசு ஒழுங்குமுறை விற்பனைக் கூடம் மூலம் இ -ஏலம் விடப்பட்ட கொப்பரைகளுக்கு பணம் கிடைப்பது தாமதமாவதால் விவசாயிகள் அவதிப்படுகின்றனர்.

இப்பேரூராட்சியில் செயல்படும் தமிழக அரசின் ஒழுங்குமுறை விற்பனைக் கூடம் சார்பில் சில ஆண்டுகளாக இ-நாம் என்ற ஆன்லைன் ஏல முறையில் கொப்பரை நேரடியாக ஏலம் விடப்படுகிறது.

ஏலத்துக்கு உரிய பணம் விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்படுகிறது. வாரந்தோறும் புதன் கிழமை நடைபெறும் இந்த ஏலத்தில் சிங்கம்புணரி, எஸ்.புதுார் மட்டுமல்லாது பக்கத்து மாவட்ட விவசாயிகளும் பங்கேற்று கொப்பரைகளை கொண்டு வந்து நேரடி ஏலம் விடுகின்றனர்.

இத்திட்டம் துவங்கப்பட்ட காலத்தில் கொப்பரைகளுக்கான பணம் இரண்டே நாட்களில் பட்டுவாடா செய்யப்பட்டது. ஆனால் சில மாதங்களாக ஏலம் முடிந்து ஒரு வாரம் முதல் ஒரு மாதம் வரை பணம் கிடைக்க தாமதம் ஆகிறது. இதனால் கொப்பரையை கொடுத்துவிட்டு பணத்திற்காக விவசாயிகள் காத்திருக்கும் அவலம் நீடிக்கிறது.

பழனியப்பன் விவசாயி, திருவாழ்ந்துார்: இ ஏல முறையில் கொப்பரைகளை ஏலம் விட்டு விவசாயிகளின் வங்கி கணக்கில் பணம் செலுத்துவது அருமையான திட்டம். ஆரம்ப காலத்தில் பயனுள்ளதாக இருந்தது. தற்போது விவசாயிகளின் வங்கிக் கணக்கில் பணம் வரவு வைக்கப்படுவது தாமதமாகிறது. விவசாயிகள் பெரும்பாலும் அவசர தேவைக்காகவே கொப்பரைகளை விற்கின்றனர்.

தனியார் கடைகளை விட அரசு நடத்தும் ஒழுங்குமுறைக் கூடம் மூலம் விற்பனை செய்தால் கூடுதல் விலை கிடைக்கும் என்பதால் இந்த ஏலத்திற்கு கொண்டு வருகின்றனர். ஆனால் பணம் கிடைக்க 15 நாள் வரை தாமதமாவதால் வேறு வழி இல்லாமல் தனியாரிடமே விற்க வேண்டிய நிலைக்கு தள்ளப்படுகின்றனர்.

எனவே ஏலம் விடப்படும் கொப்பரைகளுக்கு உரிய பணத்தை விரைந்து பெற்று உடனடியாக விவசாயிகளின் வங்கிக் கணக்கில் வரவு வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார்.

இது குறித்து ஒழுங்குமுறை விற்பனைக் கூட அதிகாரிகளிடம் கேட்டபோது: இ-நாம் இணையதளத்தில் சில நேரங்களில் ஏற்படும் தாமதத்தால் ஒரு சில விவசாயிகளுக்கு தாமதமாக பணம் வரவு வைக்கப்படுகிறது. விரைவில் சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும், என்றனர்.






      Dinamalar
      Follow us