sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

சிவகங்கை--மதுரைக்கு கூடுதல் அரசு பஸ் பயணிகள் வலியுறுத்தல்

/

சிவகங்கை--மதுரைக்கு கூடுதல் அரசு பஸ் பயணிகள் வலியுறுத்தல்

சிவகங்கை--மதுரைக்கு கூடுதல் அரசு பஸ் பயணிகள் வலியுறுத்தல்

சிவகங்கை--மதுரைக்கு கூடுதல் அரசு பஸ் பயணிகள் வலியுறுத்தல்


ADDED : ஜூலை 16, 2025 01:46 AM

Google News

ADDED : ஜூலை 16, 2025 01:46 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகங்கை : மதுரைக்கு செல்லும் ஊழியர்,மாணவர்களின் நலன் கருதி சிவகங்கையில் இருந்து காலை நேரத்தில் கூடுதல் பஸ்களை இயக்க வேண்டும் என பயணிகள் வலியுறுத்துகின்றனர்.

சிவகங்கையில் இருந்து மதுரைக்கு ஏராளமான அரசு ஊழியர், பள்ளி, கல்லுாரிக்கு மாணவர்கள் சென்று வருகின்றனர். குறிப்பாக காலை 8:00 முதல் 9:00 மணி வரை சிவகங்கையில் இருந்து மதுரைக்கு போதிய அரசு பஸ் வசதி இல்லை. இதை தவிர்க்க தினமும் காலை 8:00 முதல் 9:00 மணி வரை கூடுதலாக அரசு பஸ்களை இயக்க வேண்டும் என பயணிகள் தொடர்ந்து வேண்டுகோள் வைத்து வருகின்றனர்.

பயணி சண்முகம் கூறியதாவது: மதுரையில் உள்ள ஐ.டி., பார்க், மத்திய, மாநில அரசு அலுவலகங்கள், கல்லுாரிகளுக்கு அரசு ஊழியர், ஆசிரியர், மாணவர்கள் செல்கின்றனர். சிவகங்கை பஸ் ஸ்டாண்டில் பஸ்சிற்காக காலை 8:00 மணி முதலே காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. போதிய பஸ்கள் இல்லாததால் நெரிசலில் செல்ல வேண்டிய நிலை ஏற்படுகிறது. கூடுதல் பஸ்களை இயக்க கோரி சிவகங்கை கலெக்டரிடம் பல முறை மனு கொடுத்தும் எந்த நடவடிக்கையும் இல்லை, என்றார்.






      Dinamalar
      Follow us