sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 09, 2025 ,புரட்டாசி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

புதருக்குள் புதைந்த சிவன் கோயில் ஆய்வு செய்ய வலியுறுத்தல்

/

புதருக்குள் புதைந்த சிவன் கோயில் ஆய்வு செய்ய வலியுறுத்தல்

புதருக்குள் புதைந்த சிவன் கோயில் ஆய்வு செய்ய வலியுறுத்தல்

புதருக்குள் புதைந்த சிவன் கோயில் ஆய்வு செய்ய வலியுறுத்தல்


ADDED : ஜூன் 17, 2025 11:19 PM

Google News

ADDED : ஜூன் 17, 2025 11:19 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிங்கம்புணரி: சிங்கம்புணரி அருகே ஊருணிக்குள் பழமையான சிவன் கோயில் புதைந்திருக்க வாய்ப்புள்ளதால் அகழாய்வு நடத்த பக்தர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

இவ்வொன்றியத்தில் எஸ்.மாத்துார் கிராமத்தில் பேயம்பன் பெரிய ஊருணி என்ற பழமையான நீர்நிலை உள்ளது.

இதன் அருகே சீமைக்கருவேல மரங்களுக்கு இடையே பழமையான சிவன் கோயில் இருந்ததற்கான அடையாளங்கள் தென்படுகிறது. சிவலிங்கம் இல்லாத ஆவுடையும், சில அடி துாரத்தில் சீமைக்கருவேல மரங்களுக்கு இடையில் நந்தி சிலையும் கிடக்கிறது.

மேலும் மண்ணுக்குள் கோயில் துாண்கள் மண் மூடி கிடக்கிறது. இந்த இடத்தில் பல நுாறு ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட பழமையான சிவன் கோயில் இருந்து, படையெடுப்பாளர்களால் அழிக்கப்பட்டிருக்கலாம்.

இப்பகுதியில் மண்ணுக்குள், கோயில் இருந்ததற்கான மேலும் பல ஆதாரங்கள் இருக்கலாம். எனவே இப்பகுதியில் அகழாய்வு செய்து மண்ணில் புதைந்திருக்கும் கோயில், சிலைகள், துாண்களை வெளிக்கொண்டு வரவேண்டும் என பக்தர்கள் வலியுறுத்தி உள்ளனர்.






      Dinamalar
      Follow us