sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், செப்டம்பர் 25, 2025 ,புரட்டாசி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

கட்டிக்குளத்தில் குடிநீர் தொட்டி இடித்து அகற்றம்

/

கட்டிக்குளத்தில் குடிநீர் தொட்டி இடித்து அகற்றம்

கட்டிக்குளத்தில் குடிநீர் தொட்டி இடித்து அகற்றம்

கட்டிக்குளத்தில் குடிநீர் தொட்டி இடித்து அகற்றம்


ADDED : செப் 25, 2025 05:09 AM

Google News

ADDED : செப் 25, 2025 05:09 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மானாமதுரை: மானாமதுரை அருகே உள்ள கட்டிக்குளம் கிராமத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்களின் குடிநீர் தேவைக்காக 30 வருடங்களுக்கு முன்பு 60 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டப்பட்டு அதன் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது. ஒரு வருடத்திற்கு முன்பு அத்தொட்டி மிகவும் சேதமடைந்ததை தொடர்ந்து அத்தொட்டிக்கு அருகில் புதிய மேல்நிலை நீர் தேக்க தொட்டி கட்டப்பட்டு அதன் மூலம் தற்போது விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

சேதமடைந்த பழைய குடிநீர் தொட்டியை இடித்து அகற்ற கிராம மக்கள் வேண்டுகோள் விடுத்ததை தொடர்ந்து மானாமதுரை ஊராட்சி ஒன்றிய பி.டி.ஓ.,க்கள் ரமேஷ் கண்ணன்,முத்துக்குமரன் ஆகியோர் மண் அள்ளும் இயந்திரங்களைக் கொண்டு சேதமடைந்த மேல்நிலை நீர் தேக்க தொட்டியை இடித்து அகற்ற நடவடிக்கை எடுத்தனர்.






      Dinamalar
      Follow us