sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

சாம்சங் தொழிலாளருக்கு ஆதரவாக அக்.9ல் ஆர்ப்பாட்டம்: ஆசிரியர் கூட்டணி முடிவு

/

சாம்சங் தொழிலாளருக்கு ஆதரவாக அக்.9ல் ஆர்ப்பாட்டம்: ஆசிரியர் கூட்டணி முடிவு

சாம்சங் தொழிலாளருக்கு ஆதரவாக அக்.9ல் ஆர்ப்பாட்டம்: ஆசிரியர் கூட்டணி முடிவு

சாம்சங் தொழிலாளருக்கு ஆதரவாக அக்.9ல் ஆர்ப்பாட்டம்: ஆசிரியர் கூட்டணி முடிவு


ADDED : அக் 08, 2024 01:47 AM

Google News

ADDED : அக் 08, 2024 01:47 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகங்கை: தொழிற்சங்கம் அமைக்கும் உரிமை கோரி 28 நாட்களாக போராடும் சாம்சங் நிறுவன தொழிலாளர்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தும், அவர்களின் கோரிக்கைகளை உடனடியாக தமிழக அரசு நிறைவேற்ற வலியுறுத்தியும் கோரி அக்., 9 மாநிலம் முழுதும் ஆர்ப்பாட்டம் நடத்த தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி முடிவு செய்துள்ளது.

அதன் பொதுச்செயலாளர் மயில் கூறியுள்ளதாவது: காஞ்சிபுரம் மாவட்டத்தில் செயல்படும் சாம்சங் நிறுவனத்தில் 1500க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். தொழிலாளர்கள் தங்களது அடிப்படை உரிமைகளையும், சட்டப்படி தங்களுக்கு கிடைக்க வேண்டிய சலுகைகளையும் நிர்வாகத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி பெறுவதற்கு ஏதுவாக தங்களுக்கென்று சங்கம் அமைத்து அதை பதிவு செய்வதற்கு மாநில தொழிலாளர் நலத்துறையிடம் முறையாக விண்ணப்பித்துள்ளனர். விண்ணப்பித்து பல மாதங்களாகியும் தொழிலாளர் நலத்துறை சங்கத்தை பதிவு செய்யாத காரணத்தால் உடனடியாக சங்கத்தை பதிவு செய்திடக் கோரி செப்.,9 முதல் தொழிலாளர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.

அந்த தொழிலாளர்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தும், தொழிலாளர்களின் சங்கத்தை பதிவு செய்து தொழிலாளர் நலத்துறை உடனடியாக சான்றிதழ் வழங்க வலியுறுத்தியும் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் அக்.,9 மாலை மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.






      Dinamalar
      Follow us