/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
துணை முதல்வர் உதயநிதி வருகை : நவ.14, 15ல் சிங்கம்புணரியில் விழா
/
துணை முதல்வர் உதயநிதி வருகை : நவ.14, 15ல் சிங்கம்புணரியில் விழா
துணை முதல்வர் உதயநிதி வருகை : நவ.14, 15ல் சிங்கம்புணரியில் விழா
துணை முதல்வர் உதயநிதி வருகை : நவ.14, 15ல் சிங்கம்புணரியில் விழா
ADDED : நவ 08, 2025 01:28 AM
சிவகங்கை: தமிழக துணை முதல்வர் உதயநிதி, இரண்டு நாள் நிகழ்ச்சிகளில் பங்கேற்க சிவகங்கைக்கு நவ.14 மற்றும் 15ல் வருகை தர உள்ளார்.
காரைக்குடிக்கு நவ.,14 அன்று மாலை துணை முதல்வர் உதயநிதி வருகிறார். அன்று மாலை 6:00 மணிக்கு எல்.சி.டி. பி.எல்., அரங்கில் நடைபெறும் ராம.சுப்பையாவின் 118 வது பிறந்த நாள் விழாவில் பேசுகிறார். அன்று இரவு காரைக்குடியில் தங்குகிறார்.
நவ., 15 ம் தேதி காலை 9:00 மணிக்கு சிங்கம்புணரியில் புதிதாக கட்டிய பேரூராட்சி புதிய கட்டடத்தை திறந்து வைக்கிறார்.
காலை 10:00 மணிக்கு சிங்கம்புணரியில் அண்ணாதுரை மன்றம், முன்னாள் முதல்வர் கருணாநிதி, முன்னாள் அமைச்சர் மாதவன் ஆகியோரின் சிலைகளை திறந்து வைக்கிறார்.
காலை 11:30 மணிக்கு கிருங்காக்கோட்டையில் தி.மு.க., முன்னாள் அமைப்பு செயலாளர் எஸ்.எஸ்., தென்னரசு சிலையை திறந்து வைக்கிறார்.
அன்று மாலை 4:00 மணிக்கு சிங்கம்புணரி பாரி வள்ளல் மெட்ரிக் பள்ளியில் முன்னாள் அமைச்சர் மாதவன் சிலையை திறந்து வைக்கிறார்.
தொடர்ந்து அரசு சார்பில் வழங்கப்பட உள்ள பல்வேறு நலத்திட்ட உதவிகளை, பயனாளிகளுக்கு துணை முதல்வர் உதய நிதி வழங்குகிறார். துணை முதல்வர் வருகைக்கான ஏற்பாடுகளை அமைச்சர் பெரியகருப்பன் தலைமையில் தி.மு.க.,வினர் செய்து வருகின்றனர்.

