ADDED : ஜூலை 17, 2025 11:35 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை: சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் அனைத்து துறை சார்ந்த வளர்ச்சி பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம் நடந்தது.
கலெக்டர் பொற்கொடி தலைமை வகித்தார். மாவட்ட கண்காணிப்பு அலுவலர் (சமூக நலத்துறை இயக்குனர்) சங்கீதா வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து விளக்கம் அளித்தார். மாவட்ட அளவில் ஒக்கூரில் நடந்த உங்களுடன் ஸ்டாலின் முகாம், பெருங்குடியில் கிராம சாலை திட்டம், காஞ்சிரங்காலில் தோழி மகளிர் விடுதி கட்டுமான பணி உள்ளிட்ட வளர்ச்சி பணிகளை பார்வையிட்டார். ஊரக வளர்ச்சி முகமை இயக்குனர் ஜி.அரவிந்த், மகளிர் திட்ட இயக்குனர் கவிதப்பிரியா, கூட்டுறவு இணை பதிவாளர் ராஜேந்திர பிரசாத், ஆயத்தீர்வை உதவி கமிஷனர் ரங்கநாதன், கோட்டாட்சியர் விஜயகுமார், கலெக்டர் பி.ஏ.,க்கள் (பொது) முத்துக்கழுவன், (நிலம்) கீர்த்தனா மணி பங்கேற்றனர்.