sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

திருச்செந்துார் கோயிலில் பக்தர் பலி; நிர்வாகம் மீது உறவினர்கள் புகார்

/

திருச்செந்துார் கோயிலில் பக்தர் பலி; நிர்வாகம் மீது உறவினர்கள் புகார்

திருச்செந்துார் கோயிலில் பக்தர் பலி; நிர்வாகம் மீது உறவினர்கள் புகார்

திருச்செந்துார் கோயிலில் பக்தர் பலி; நிர்வாகம் மீது உறவினர்கள் புகார்

1


ADDED : மார் 18, 2025 01:27 AM

Google News

ADDED : மார் 18, 2025 01:27 AM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காரைக்குடி; காரைக்குடியைச் சேர்ந்த ஜவுளி வியாபாரி, திருச்செந்துாரில் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தார். கோயிலில் மருத்துவ வசதி இல்லாததே உயிரிழப்புக்கு காரணம் என உறவினர்கள் கூறினர்.

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி நா. புதூர் சொக்கலிங்கம் செட்டியார் வீதியைச் சேர்ந்தவர் ஓம் குமார் 50. ஜவுளி வியாபாரி. இவர் நேற்று முன்தினம் பேரனுக்கு மொட்டை அடித்து காது குத்துவதற்காக குடும்பத்தினருடன் திருச்செந்துார் கோயிலுக்கு சென்றுள்ளார். ரூ.100 டிக்கெட்டில் வரிசையில் சென்றபோது மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்தார். அவரது உடல் நேற்று காரைக்குடிக்கு கொண்டு வரப்பட்டு இறுதி சடங்கு செய்யப்பட்டது.

உறவினர்கள் கூறியது: கூட்ட நெரிசலில் மூச்சு திணறி கீழே விழுந்து விட்டதாக அலைபேசி அழைப்பு வந்தது. நாங்கள் கிளம்பி செல்வதற்குள் அவர் இறந்துவிட்டார் என தகவல் கூறினர். கூட்டத்திலிருந்து வெளியே வருவதற்கே அரை மணி நேரமாகி விட்டது. ஆம்புலன்ஸ் வருவதற்கும் தாமதாகி விட்டது. மருத்துவ வசதியே இல்லை.

கோயிலில் அவசர மருத்துவ வசதி இருந்தால் காப்பாற்றி இருக்கலாம். ஏற்கனவே உடல்நிலை சரியில்லாமல் வந்ததால் இறந்து விட்டார் என சாதாரணமாக ஹிந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் கூறுகிறார். இறப்பதற்கு சில நிமிடங்கள் முன்பு வரை அவர் கடலில் குளித்து விளையாடிய வீடியோ கூட இருக்கிறது.

நாங்கள் சொன்ன எதையும் அவர்கள் கேட்கவில்லை. இறந்தவரின் உடல் கிடைப்பதற்காக, போலீஸ்காரர் கூறியதைத்தான் நாங்கள் எழுதிக் கொடுத்தோம். ரூ. 100 டிக்கெட்டில் சென்ற எங்களுக்கே இந்த நிலை என்றால் இலவச தரிசனம் செல்வோர் நிலை என்ன. தண்ணீர் வசதி கூட இல்லை என குமுறினர்






      Dinamalar
      Follow us